கடந்த ஆட்சியில் தவறு செய்த பலர் தற்பொழுது நீதிவான்களாகியுள்ளதாக பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சி மூலம் பிரித்தானியாவுக்கு அடகு வைத்த நம் நாட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மீண்டும் மீட்டெடுத்து அவ்வளங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அவ்வாறான தவறுகளை மேற்கொண்டவர்கள் தற்பொழுது நீதிவான்கள் போன்று பேசுகின்றார்கள். ஆனாலும் இதனை அவிழ்ப்பதற்கு எங்களுக்கு சில காலங்கள் தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


0 Comments