முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள் சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு அவசியமிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரவித்துள்ளார்.
நேற்று குருணாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீண்டும் ஒருமுறை ராஜபக்சவின் தேசியவாதத்தை வீணடிக்கும் கூட்டத்திற்கு நாட்டை ஒப்படைத்தால் முழு நாடும் நாசமடைந்துவிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் முதுகெலும்பில்லாத சிலர் மகிந்த ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டுவருவதன் மூலம் தேசியவாதத்தினை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
மேலும் தங்களது அரசியல் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக இவ்வாறு தேசியவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments