முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் மேடைக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. எனினும் இதுவரை முடிவுக்கு வரவில்லை என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்திய பின்னரே கருத்து தெரிவிக்கவுள்ளதாக பொதுபலசேனாவின் பிரதான செயலாளர் வணக்கத்துக்குரிய பிக்கு கலகொட அத்த ஞானசார தேரர் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


0 Comments