அநீதிக்கு எதிராக வீதிக்கு இறங்குவதற்கு தனக்கு அவசியம் உள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபையில் ஆசிரியர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அக்குறையினை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இதனைக் குறித்து யோசிப்பது கடினமான ஒரு விடயம்.
எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்குவோம். எனக்கும் வீதிக்கு இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே நீதி வேண்டி நாங்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
0 Comments