கட்சியின் வெற்றி தனி மனிதரிடம் இன்றி, தனி மனிதர்களுக்கு இடையிலான ஒற்றுமையிலேயே தங்கி இருப்பதாக, எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் ஆகியோ இன்று பதவி ஏற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலர் இருக்கின்றனர்.
அவர்களை விடுத்து கட்சியின் ஒன்றை தனி ஒரு நபரால் தீர்மானிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, கட்சியின் பிரதம வேட்பாளர் குறித்து இப்போதைக்கு அறிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் பொதுத் தேர்தல் ஒன்று குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், கட்சியும் ஏனைய கூட்டணி கட்சிகளும் இணைந்து இது குறித்த தீர்மானம் ஒன்றுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றிருந்த இந்த கூட்டத்தின் போது, கட்சியின் பொது செயலாளர் அனுரபிரியதர்சனயாப்பா, டபிள்யு.டீ.ஜே. செனேவிரத்ன மற்றும் ஆர். துமிந்தவில்வா, மகிந்தாநந்த அழுத்கமகே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிந்தனர்.
அதேநேரம் நேற்றையதினம் நுகேகொடையில் இடம்பெற்ற மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சீ.பீ.ரத்நாயக்க உள்ளிட்ட சிலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments