வடமேல் மாகாண கௌரவ முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர அவர்கள் வடமேல்
மாகாண சபை உறுப்பினர் கௌரவ N.T.M. தாஹிர் அவர்களின் அழைப்பை ஏற்று இன்று கற்பிட்டிக்கு விஜயம் செய்தார்.
கற்பிட்டியில் புதிதாக நிர்மானிக்கபட்டுள்ள கற்பிட்டி கோட்டக் கல்வி காரியாலய கட்டிடத்தை முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர அவர்கள் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ B. விக்டர் என்டனி பெரேரா,
வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ சனத் நிஷாந்த, புத்தளம் தேர்தல்தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் M.N.M. நஸ்மி, கற்பிட்டி
பிரதே சபைத் தலைவர் மில்ஹாஜ் மற்றும் உறுப்பினர்கள் ஆயோர், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளார் அனீஸ் கற்பிட்டி கோட்ட பிரிவுக்கு உட்பட்ட அதிபர்கள் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Comments