Subscribe Us

ஐந்து கோடி ரூபாய் மதிபுள்ள வெளிநாட்டு நாணயத்தாள்களை கட்டார் நாட்டிற்கு கடத்த முயன்றவர் கைது


இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக கட்டார் நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கோடியே 83 இலட்சத்து 9 ஆயிரத்து 692 ரூபாவினை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு – மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments