Subscribe Us

header ads

ஓய்வுபெறும் எண்ணமில்லை!


சர்­வ­தேச ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு இரு­பது போட்­டி­களில் இன்னும் 2 அல்­லது 3 வரு­டங்கள் என்னால் விளை­யாட முடியும் என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் தில­க­ரட்ன டில்ஷான் தெரி­வித்­துள்ளார்.

நடப்பு உல­கக்­கிண்ணத் தொட­ரோடு இலங்கை அணியின் மூத்த வீரர்­க­ளான குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இருந்து ஓய்­வு­பெ­ற­வுள்­ளனர்.
இந்­நி­லையில் தற்­போது தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று டில்ஷான் அறி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் கூறு­கையில்இ ஒருநாள் மற்றும் இரு­பது ஓவர் போட்­டி­களில் தொடர்ந்து விளை­யாடும் எண்ணம் எனக்­கி­ருக்­கி­றது.
உல­கக்­கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் இது குறித்து, இலங்கை அணித்­த­லைவர் மற்றும் அணி நிர்­வா­கத்­திடம் நான் கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன். அனு­பவ வீரர்­க­ளான மஹேல மற்றும் சங்­கக்­கார ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்­போ­கி­றார்கள்.
எனவேஇ எனது அனு­பவம் இலங்­கை­ய­ணிக்கு கைகொ­டுக்கும் என நான் நம்­பு­கின்றேன். தற்­போ­தைய எனது உடல் நிலை மற்றும் தகு­தியை வைத்துக் கொண்டுஇ என்னால் இன்னும் இரண்டுஇ மூன்று வரு­டங்கள் விளை­யாட முடியும். 2019 உலகக்கிண்ணம் வரை விளையாட எதிர்பார்க்கின்றேன், எனக்கு உடற்தகுதி காணப்படாத பட்சத்தில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments