Subscribe Us

header ads

பாராளுமன்றத்தில் 94 பேர் சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்கள்





துறையில் துப்­புரவு தொழி­லா­ளி­யாக இணை­வ­தற்கு க.பொ.த (சா/த) கல்வித் தகைமை கோரப்­ப­டு­கின்­றது. ஆனால் நாட்டை நிர்­வ­கிக்கும் பாராளுமன்­றத்தில் உள்ள 94 உறுப்­பி­னர்கள் சாதா­ரண தரப் பரீட்­சையில் சித்தி பெறாத­வர்கள்.

இது எந்த விதத்தில் நியா­ய­மாகும் என கேள்­வி­யெ­ழுப்பும் ஐ.தே.கட்சி, எத்­தனோல் ஹெரோயின் வியா­பா­ரிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோரை பாரா­ளு­மன்றம் அனுப்பும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்­டு­மென்றும் அக்­கட்சி தெரி­வித்­தது.

இது தொடர்­பாக ஐ.தே.கட்சி மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண மேலும் தகவல் தரு­கையில், இன்று எமது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பி­னர்­களில் 94 உறுப்­பி­னர்கள் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்தி
பெறா­த­வர்கள்.

அதே­போன்று 142 உறுப்­பி­னர்­களில் உயர்­தர பரீட்­சையில் சித்தி பெற்­ற­வர்­களும் சித்தி பெற்று பல்­க­லைக்­க­ழகம் செல்­லா­த­வர்­களும் அடங்­கு­கின்­றனர்.

நாட்டில் 2 கோடி மக்­களின் நிதி நிர்­வாகம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சட்­டங்­களை உரு­வாக்கும் உய­ரிய இட­மான பாரா­ளு­மன்­றத்தில் படித்­த­வர்­களின் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது.

அரச துறையில் துப்­பு­ரவு தொழி­லா­ளி­யாக இணை­வ­தற்கு க.பொ.த (சா/த) பரீட்­சையில் சித்தி பெற்­றி­ருக்க வேண்டும்.

ஆனால் நாட்டை நிர்­வ­கிக்கும் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள உறுப்­பி­னர்­களில் 94 பேர் சாதாரண தர பரீட்­சையில் சித்தி பெறா­த­வர்கள்.

இது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும்? அது மட்­டு­மல்­லாது எத்­தனோல் போதைப்­பொருள் வியா­பா­ரிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டோரும் எந்­த­வி­த­மான அர­சியல் ஞானமும் இல்­லா­த­வர்­களும் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ளனர்.

இதற்கு நாட்டு மக்­கள்தான் காரணம். அவர்கள் தமது வாக்­கு­களை வழங்­கியே இவ்­வா­றான நிலை­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். எதிர்­கா­லத்தில் இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.

தேர்­தல்­களில் வாக்­க­ளிக்கும் போது மக்கள் சிந்­திக்க வேண்டும். படித்தவர்கள் பண்பாளர்களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த முடியும்.

படித்தால் மட்­டுமே அர­சி­யலில் சாதிக்க முடியும் என நான் விவா­திக்­க­வில்லை. டி.எஸ். சேனா­நா­யக்க, பிரே­ம­தாஸ போன்­ற­வர்கள் கல்­வியில் மேதா­விகள் அல்லர்.

ஆனால் பண்­பா­ளர்கள். மக்கள் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டவர்கள். அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியர்கள். அவ்வாறானவர்களே தேவைப்படுகின்றார்கள்.

எனவே, எதிர்காலத் தேர்தல்களில் புதிய மாற்றங்களுக்கு மக்கள் வித்திட வேண்டும் என்றும் புத்திக பத்திரண எம்.பி. தெரிவித்தார்.

Post a Comment

0 Comments