இன்று 24-01-2015 சனிக் கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் 6.30 மணியளவில் NFGG இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்களது கொள்கை விளக்க நிகழ்வில் மு.கா தலைமையினை அதிகம் விமர்சித்த போது கொதித்தெழுந்த சாய்ந்தமருது மக்கள் NFGG இனது செயலாளர் பேசிக்கொண்டிருந்த வேளை தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.இதில் மூன்று பேர் அளவில் காயமடைந்துள்ளதாகவும் மண்டபத்தின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.இறுதி வரை NFGG இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சாய்ந்தமருது மக்களினால் உரையாற்ற முடியாத அளவு தடுக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்பும் மு.கா தலைமையினை விமர்சித்த போது இவர்கள் அடிவாங்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுனர்ப் பதவி முஸ்லிம்களிடமிருந்து பறி போய் இருக்கும் சமகாலத்தில் முதலமைச்சை எப்பாடு பட்டாவது பெற வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் குறியாக உள்ளார்கள்.இச் சந்தர்ப்பத்தில் த.தே.கூ இற்கு முதலமைச்சை மு.கா வழங்க உடன் பட வேண்டும் என்ற NFGG இன் கூற்று முஸ்லிம் மக்களிடையே அதிக வெறுப்பைத் தோற்றுவித்திருந்தது.அதிலும ் குறிப்பாக மு.கா இற்கு முதலமைச்சு வழங்கப்படுமாக இருந்தால் அது சாய்ந்தமருது கிழக்கு மாகாண சபை மு.கா குழுத் தலைவர் ஏ.எம் ஜெமீலிற்கு வழங்க அதிக வாய்ப்புள்ள நிலையில் NFGG இன் இக் கூற்று சாய்ந்தமருது மக்களிடையே ஏனைய மக்களை விட ஒரு படி மேல் விமர்சனத்தை தோற்றுவித்திருந்த இச் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வில் மு.கா தலைவரினை விமர்சித்த விடயம் சாய்ந்தமருது மக்களிடையே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக அமைந்துள்ளது.இவைகளே பிரச்சினை எழுவதற்கான அடிப்படைக் காரணி எனலாம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 Comments