Subscribe Us

header ads

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் NFGG


நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்டு மைத்திரியை ஆதரித்த அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பாக பல சவால்களுக்கு மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த பெண்கள் வயோதிபர்கள் மாற்றுத்திரனாளிகள் ஆகியோருக்கு விசேட  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டும் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் சமூகத்தை தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நாட்டில் ஜனநாயகத்தக்கு விரோதமாகவும் ஊழல் மோசடிகள் மக்களின் வாழ்க்ககை செலவின் அதிகரித்ததன்மை சட்டம் ஒழுங்கின் முறையான அமுலாக்கமின்மை குடும்ப ஆதிக்கம், சர்வதிகார ஆட்முறை இன முரன்பாடு போன்ற நல்லாட்சிக்கு விரோதமான ஆட்சிமுறைமை ஒன்றை மகிந்த ராஜபக்ஷ அவர்களின்  அரசாங்கம் முன்னெடுத்தது. இதனை மாற்றியமைத்து எமது தேசத்தில் ஆட்சிமுறைமை மாற்றமொன்றுக்கான ஆட்சிமாற்றம் அவசியப்பட்டது. இதனை முன்னோக்கி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தது.
இச்செயற்பாட்டில் நாம் பரவலாக மைத்திரிபால அவர்களை ஆதரிக்கும் அணியினரோடு இணைந்து செயற்பட்டோம். தற்போது ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்கள். நாம் எதிர்பார்த்த நல்லாட்சி முறைமை அமுலாக்கம் செய்யப்படுவதற்கு இதனை ஓர் ஆரம்பப் புள்ளியாக நாம் கருதுகின்றோம். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்றும் போல் சமூக நீதியை உறுதிபடுத்துவதிலும் நல்லாட்சியை உறுதிபடுத்துவதிலும் அர்ப்பணத்துடன் செயலாற்றும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி தத்துவங்களை கொள்கை ரீதியாகவுசும் நடைமுறை ரீதியாகவும் ஏற்றுக் கொள்கின்ற அரசியல் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும். முஸ்லிம் மக்கள் எமது அழைப்பையேற்று பெருந்திரளாக வாக்களி;ப்பில் கலந்துகொண்டமைக்கும் மைத்திரியின் வெற்றிக்கு பங்களிப்ப செய்தமைக்கும் நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மக்களுக்கு விசுவாசமான அரசியல் வேலைத்திட்டத்தில் எம்மோடு இணைந்திருக்கும்படி மக்களை அழைக்கின்றோம். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறது.

Post a Comment

0 Comments