முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா சிறையில் அணிந்த ஜம்பரை மைத்திரிக்கு தயாராக வைத்திருப்பதாக கூறி மேடைகளில் வீரவசனம் பேசிய கார்ட்போர்ட் அரசியல் முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதியின் காலடியில் விழ முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினரும் பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் அன்று எமது உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கினோம். எமக்கு பக்கபலமாக மக்கள் களமிறங்கினார்கள்.
அன்று வெட்கம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிவில் அமைப்பு பிரதானிகள் என சிலர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
மைத்திரிபால சிறிசேன ஒரு இனத் துவேசி எனக் கூக்குரலிட்டவர்களால் சில மவுலானாக்களும், புல்லாக்களும், ஹாஜியார்களும் மஹிந்த ராஜபக்சவின் எலும்பு துண்டுகளுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்தர்கள். ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரி பக்கம் தாவ தூது அனுப்புகிறார்கள்.
இதே மஹிந்த வென்றிருந்தால் எம்மையும் எமது சமூகத்தையும் மகிந்தவிடம் தோலுரித்து காட்டியிருப்பார்கள். எம்மை அடித்து நொறுக்கியிருப்பர்கள்.
சமூக நலனுக்காக ஜனாதிபதி மைத்திரிக்கு அதரவாக இயங்கி வந்த அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் ஊடகங்களை மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஊடாக முடக்கியிருப்பார்கள்.
மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்களை நாம் ஒருபோதும் எம்மோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்.
அதே போல் வரும் காலங்களில் மக்களும் குறிப்பாக ஊடகங்களும் இவர்களை புறக்ககனிக்கவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments