Subscribe Us

header ads

என்னைப் பற்றிய செய்திகள் தவறானவை!: பசில் மறுப்பு - தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா

தன்னைப் பற்றிய செய்திகள் தவறானவை என்றும், விரைவில் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் தனது மனைவி சகிதம் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். தற்போது அவர் அமெரிக்காவில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தினூடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு பசில் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை என்றும், மிக விரைவில் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி நாட்டில் பரவி வரும் தகவல்களை கட்டுக்கதைகள் என்று வர்ணித்துள்ள பசில் ராஜபக்ச, மிக விரைவில் அனைத்துக்கும் உரிய முறையில் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கான பொறுப்பை ஏற்று சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பஷில் ராஜபக்ச இராஜினாமா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்று அந்த தேர்தல் பிரசார செயற்பாட்டில் முக்கியஸ்தராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஷில் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ஜனவரி 15 இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ள பசில் ராஜபக்ச, தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் தான் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளி கட்சிகளும் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை வெளியிட்டுள்ள பஷில் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அதன் செயலாளர் சுசில் பிரேமஜயந்த. சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுரயாப்பா மற்றும் தனக்கும் தேர்தல் செயற்பாடுகளுக்க்காக பாரிய ஒத்துழைப்பை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மிகவும் நீதியாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொலிஸார் பாதுகாப்பு தரப்பினர் கம்பஹா மாவட்ட உள்ளிட்ட நாடு முழுவதும் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்த அனைத்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தேர்தல் சட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட்டமை நாட்டின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு காரணமாக அமைந்தது எனறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments