புத்தளம் நகரை சேர்ந்த இளம் பெண்மணி ஒருவரை காணவில்லை என புத்தளம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இல:11, ஒழுங்கை இல: 14, மரிக்கார் வீதி, புத்தளம் எனும் முகவரியில் வசித்து வந்த பாத்திமா ரினூஷா (வயது 26) என்பவரே கடந்த சனிக்கிழமை (10) மாலை 4 மணி முதல் காணாமல் போயுள்ளதாக போலீஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் திருமணம் முடித்து மூன்று மாதங்களே ஆகின்றதாக தெரிவித்த காணாமல் போனவரின் தந்தையான எம்.ஓ.ஏ.லதீப் இறுதியாக அவர் சல்வார் உடையோடு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவரை கண்டவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ அல்லது 0777868699 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பை ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
ருசி சனூன்
நன்றி : புத்தளம் ஒன்லைன்
0 Comments