எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக ஆறு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியானவர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 12ம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பதாரிகள் பொருத்தமானவர்களா என்பது குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் தேர்தல் ஆணையாளருக்கு தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்பிற்கு அழைத்து தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
2010ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்த போதிலும் 401118 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments