Subscribe Us

header ads

இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!


தமது பிரஜைகள் இலங்கையில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகள், உள்ளுர் ஊடகங்களின் செய்திகளை கண்காணித்து அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு தூதரகம் கேட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக பாரியளவில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது வன்முறைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக தூதரகம் எச்சரித்துள்ளது.

எனவே இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகள், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தமது தொடர்புகளை பேணுமாறும் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவும் இவ்வாறான பயண அறிவுறுத்தலை தமது பிரஜைகளுக்கு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments