Subscribe Us

header ads

பாலாவி காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்! பொலிஸாரால் முற்றுகை

கொடிகாமம், பாலாவி காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவி காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சிந்தக்க பண்டாரவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று குறித்த இடத்திற்குச் பொலிஸார் சென்றுள்ளனர்.

குறித்த இடத்திற்கு இரண்டு குழுக்களாக சென்றதாக தெரிவித்த பொலிஸார், பாலாவி மயானத்தை அண்டிய இடமொன்றில் பற்றை மறைவில் நெருப்புப் புகைமூட்டம் காணப்பட்டது.

குறித்த அடையாளத்தை வைத்து அங்கு சுற்றி வளைத்ததாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கச்சாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும்,21 லீற்றர் ஸ்பிரிட், 180 லீற்றர் கோடா, 2 கிலோ ஈஸ்ட் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments