பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சதிகள் அடங்கியுள்ளதாகவும்,
அவற்றை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என தான் கேட்டுக்
கொள்வதகவாவும் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக எந்தவித
நிபந்தனையும் இன்றி தாம் பூரண ஆதரவு வழங்குவதாக கலபொட அத்தே ஞானசார தேரர்
இன்று (24) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
சொன்னபடி செய்யும் மாடொன்று பொது வேட்பாளராக நியமிக்கபட்டுள்ளதாகவும்,
ஹெல உருமின் ரதன தேரர் சிங்கள பெளத்தர்களின் பிரச்சினைகள் பற்றி கதைத்தால்
நல்லா இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments