இன, மத பேதமின்றி எதிர்கால தலைமுறையினருக்காக கைகோர்த்து கொள்வோம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினர் நாட்டை அல்ல உலகத்தை வெல்ல வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இதற்காக அனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிலர் இனவாதத்தை தூண்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தம்மை பொறுத்த வரையில் ஜனாதிபதி பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீதியில் நடந்து செல்ல முடியும்.இலங்கை பொது மக்கள் தம்மை பாதுகாப்பர்.
0 Comments