ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை பெற்ற வெற்றியை
விட இம்முறை மிக இலகுவாக வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர்
சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் அல்ல நான்கு தடைவைகள் இலங்கையை ஆட்சி செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியே அடுத்த ஆட்சியை அமைப்பார். பொது வேட்பாளராக போட்டியிடும்
மைத்திரிபால பொலன்நறுவை தொகுதியை மாத்திரமல்ல, பொலன்நறுவை மாவட்டத்திலோ,
வடமத்திய மாகாணத்திலோ எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார் எனவும்
சுமணதாச அபேகுணவர்தன கூறியுள்ளார்.


0 Comments