தங்களது சொந்த நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிஸ்பேன் நகரில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்றிருந்தார். மாநாடு முடிவடைந்தவுடன், நேற்று திங்கட்கிழமை சிட்னி நகருக்கு வருகைத் தந்தார்.
அங்கு, அவுஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் சார்பில் சிட்னி அல்போன்ஸ் அரங்கத்தில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் பங்குபற்றிய அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் கூறுகையில், நாட்டில் வெளிநாட்டு முதலீட்டினை ஊக்குவிக்கும் வகையில், மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளேன். அதன் மூலம், நாட்டின் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒத்துழைக்குமாறு பிரதமர் கேட்டு கொண்டுள்ளார்.
அத்துடன் இந்திய பூர்வீகம் கொண்டவர்களை கிராம அபிவிருத்தியில் பங்களிப்பு செலுத்தும் வகையில், இந்தியாவிற்கு வருகை தருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய வம்சாவளி மக்களுக்கு வாழ்நாள் விசா வழங்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments