தமது கட்சி முன்வைத்த கோரிக்களை அரசாங்கம்
நிராகரித்த நிலையிலேயே தாம் அரசாங்கத்தை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாம் அரசை விட்டு விலகினாலும், அரசு
மேற்கொள்ளும் நற்பணிகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும், தற்போதைக்கு
எதிரணியை ஆதரிக்கும் தீர்மானம் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம்,ஹெல
உறுமயவின் இந்த தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு
கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என்று, அக்கட்சியின் தலைவர் ஒமல்பே
சோபித்த தேரர் தெரிவித்தார்.
தொடர்ந்தும்
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு
முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின்
சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு
நடவடிக்ககை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை
அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும், அவற்றை நிறைவேற்றும்
முடிவில் அரசாங்கம் இல்லை எனத் தெளிவாகிறது என்றும் அக்கட்சி இன்று
தெரிவித்தது.
இது
தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழு கூட்டத்தின் போது, சுமார் 4
மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக
அக்கட்சி மேலும் குறிப்பிட்டது.
0 Comments