மழையுடன் வானிலிருந்து மாணிக்கக்கற்கள் விழுந்ததாக கூறப்படும் அதிசய சம்பவம் லுணுகலை பிரதேசத்தில் பதிவாகியது.
லுணுகலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(18) காலை பெய்த அதிக மழையுடன்
மாணிக்கக்கற்கள் விழுவதாக கூறப்பட்டதையடுத்து, அங்கு கூடிய பிரதேசவாசிகளை
அகற்ற நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லுணுகலை தொடக்கம் வெல்லவெல பிரதேசம் வரையான வீதியில் 4 கிலோமீற்றர்
தூரத்துக்கு மாணிக்கற்களை பொறுக்கி எடுப்பதற்காக பாரியளவில் மக்கள்
கூடியிருந்தனர்.
குறித்த வீதியூடாக பயணித்த லொறியொன்று நிலத்தில் குடைசாய்ந்ததையடுத்து,
அதிலிருந்து வீழ்ந்த கோமேதகம் மற்றும் ஏனைய வகைகளை சேர்ந்த மாணிக்கற்களை
மழையுடன் விழுந்தாக நினைத்து, மக்கள் அந்த கற்களை சேகரிக்க சென்றுள்ளதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் இந்த நடவடிக்கை அந்த பகுதியூடான போக்குவரத்துக்கு இடையூறு
ஏற்படுத்தியதையடுத்து, அங்கிருந்து மக்களை அகற்றி ,போக்குவரத்தை சீர்
செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
0 Comments