“மகிந்தவுக்கு மூன்று தடவை முடியாது” என்ற தொனிப்பொருளில் மக்கள்
விடுதலை முன்னணி முன்னெடுக்கும் விழிப்பூட்டல் நிகழ்வு இன்று காலை கொழும்பு
புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் நடைபெற்றது.
இதன்போது “சட்டவிரோத ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்” என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக,
விஜித கேரத் மற்றும் லால்காந்த உட்பட மக்கள் விடுதலை முன்னணியின்
ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
-Daily Ceylon-
0 Comments