Subscribe Us

header ads

மீண்டும் ஒரு றிஸானா குவைட்டில் கொலை கொலையாளி கைது

நிகார் குவைத்-
இலங்கை கிழக்கு மாகாணம் திருக்கோணமலை கந்தளாய் கொழணியைச் சேர்ந்த 33 வயதான றிசானா பணிப்பெண்ணாக குவைத்தில் பணிபுரிந்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களுன் பின்னர் சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த பெண்ணிற்கு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

பஹாஹில் பகுதியில் வைத்தே 33 வயதான இலங்கை பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தான் நாட்டு பிரஜையின் காதலியான இலங்கை பெண்ணை சந்தேகித்தே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments