Subscribe Us

header ads

ஜனாதிபதி, ஹெல உறுமய சந்திப்பு வெற்றியளிக்கவில்லை : ஜனாதிபதி ஹெல உறுமயவினர் மீது கடும் பாய்ச்சல்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என பிரபல ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று வெறும் 15 நிமிட நேரமே நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லையென்றும், ஜனாதிபதி அவ்வமயம் கடும் சினத்தோடு இருந்ததாகவும் அவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறயிருப்பதால் ஹெல உறுமயுடன் எதுவித உடன்படிக்கைக்கும் செலவதற்கு தற்போது நேரமில்லை எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு முதன் முதலில் சவால் விடுத்தவர் ரத்ன ஹிமியேயென்று கடும் சினத்தோடு இங்கு  குற்றம் சாட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு, தமது யோசனைகளை ஏற்கிறீர்களா என்று ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம் வினவியபோது, அவர் அதை நிராகரிப்பதாகக் கூறி எழுந்து சென்றதாகவும் அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தமது கட்சியின் யோசனைகள் தொடர்பில் 05 நாள் காலக்கெடு விதித்திருப்பதாகவும், அதற்குள் பதிலளிப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அமைச்சர்கள் சுசில் பிரேம்ஜெயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்‌ஷ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
DC

Post a Comment

0 Comments