Subscribe Us

header ads

ஜனாதிபதிக்கு பாரத ரத்னா : தலைவர்கள் கடும் கண்டனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் இது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷவுக்கு விருது என்பதை ஒருபோதும் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனை தெரிவித்த சுப்பிரமணியசாமியையும், அவர் சார்ந்த பாஜகவையும் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம்,மஹிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர்.சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.
போர் விதி மீறல்களை மீறிய-மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.
ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் சகோதரர் வை.கோ.வும், பா.ம.க தலைவர் ராமதாசும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பா.ஜ.க.வுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்கட்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments