சவூதி
அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்த போது எஜமானால் இம்சிக்கப்பட்ட
இந்தோனேசியப் பெண்ணுக்கு 80,000 டொலர்கள் இலங்கை நாணயத்தில் 10,800,000
என்ற பெருந்தொகை நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்தோனேஷியப் பெண்கள் அதிகமாக பணிப்பெண்களாக வேலை பார்த்துவருகின்றனர்
மேற்குறிப்பிட்ட பெண் அங்கு பணியாற்றிய 7 வருட காலத்தில் மீண்டும்
மீண்டும் துன்புறுத்தப்பட்டதால், அவரது உடல் நிரந்தரமாக உருக்குலைந்து
போயிருக்கிறது.
மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே அவர் அனாதையாக வீசப்பட்டு கிடந்தபோது பொலிசாரால கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணின் நிலமை குறித்து
இந்தோனேசிய தூதரகத்துக்கு தகவல்கள் தெரிவித்ததனைத் தொடர்ந்து.
அவரது
எஜமானருக்கு எதிராக வழக்கை தொடுப்பதற்கு இந்தோனேசிய தூதரகம்
முயற்சித்து இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியே
தீர்க்கப்பட்டுள்ளது.
0 Comments