அரசாங்கம் நாளை சமர்ப்பிக்கவுள்ள அடுத்த வருடத்திற்கான புதிய வரவு
செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வருமானம் 171300 கோடி ரூபா
எனவும், அடுத்த வருடத்துக்காக மதிப்பிடப்படும் செலவுகள் 350300 கோடி ரூபா
எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்
வரவை மிஞ்சிய செலவாக 179000 கோடி ரூபா காணப்படுவதாக
குறிப்பிடப்படுகின்றது.
புதிய வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை
சுபநேரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம்
திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. முதலாம்
வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் முதலாம் திகதி மாலை 5.00 மணிக்கு
இடம்பெறும்.
இதேவேளை, நவம்பர் 3 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகிறது.
இதில் சிரேஷ்ட அமைச்சுக்கள் (விசேட அலுவல்களுக்கான செயலகம்) அடங்கலாக 23
அமைச்சுகள் மீதான விவாதம் ஒரே தினத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வரவு செலவுத்திட்ட விவாதங்கள் தினமும் 8 மணி நேரம் நடைபெற இருப்பதோடு
ஒவ்வொரு செலவுத் தலைப்பிற்கும் 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரவு
செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி
இடம்பெறவுள்ளது.
0 Comments