Subscribe Us

header ads

காசாவுக்கு ஆதரவாக பேண்ட் அணிந்து விளையாடிய மொய்ன் அலி, ISIS போராளிகளுக்கு கடும் கண்டனம்.


சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள்  அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்ட்வன் சாட்லாப் மற்றும்  சிரியாவில் பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயஸ் தலையை  துண்டித்து படு கொலை செய்ததாக செய்திகள் வெளியானது அறிந்ததே.

ஐ.எஸ்.ஐ.எஸ். இன் இந்த செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொய்ன்அலி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இந்த செயலை இஸ்லாம் அனுமதிக்காது. அந்த அமைப்பின் நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துகு உரியதாகும். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த மொய்ன் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காசாவுக்கு ஆதரவாக பேண்ட் அணிந்த வாசகத்துடன் ஆடி இருந்தார். இதற்காக அவர் நடுவரால் எச்சரிக்கப்பட்டு இருந்தார்.

Post a Comment

0 Comments