ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு
உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
நிவ்யோர்க்கில் வைத்து இன்று உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும்
சந்தித்திருக்கிறார்.
நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, கொலம்பியா
ஜனாதிபதி ஜுவான் எம்.செந்தோஸ், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ்
சர்மா, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரை இன்று
சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டுமன்றி, கொலம்பியாவுடன் இருதரப்பு
நல்லுறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கொலம்பிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி
கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments