(முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்)
அதிஷ்டம் என்பது ஆள்,தொழில் பார்த்து வருவதில்லை.“கொடுக்க நினைத்தால்
கடவுள் கூரையைப் பிளந்தாவது கொடுப்பார்” என்பது கிராமப்புறங்களில்
சாதாரணமாக மக்கள் பேசும் ஒரு மொழி வழக்கு. இதனை உண்மைப் படுத்தும் வகையில்
பிரித்தானியாவில் வீதிகளைத் துப்பரவாக்கும் தொழிலாளி ஒருவருக்கு லொத்தர்
அதிஷ்டச்சீட்டு குலுக்களில் 45 லட்சத்து 70 ஆயிரத்து 887 பவுண்ட் பரிசு
விழுந்துள்ளது. யப்பா நம்ம நாட்டு பணப் பெறுமதியின் படி ரூபா.976,425,971/-
இது வரை நாம் இந்தத் தொகையை எழுதியாவது இருப்போமா என்பது கூட சந்தேகமே.
இவர் ஜோசப் வைட்டிங் (Joseph Waiting) எனும் பெயர் கொண்டழைக்கப்படும்
வடக்கு லண்டனை சேர்ந்தவர். 42 வயதுடைய இவர் வீதிகளை பெருக்கி சுத்தம்
செய்யும் ஒரு வீதித் தொழிலாளி.
இவர் வாங்கி விட்டு மறந்து போன ஒரு லொத்தர் சீட்டுக்கு 45 லட்சத்து 70
ஆயிரத்து 887 பவுண்ட் பரிசு விழுந்துள்ளது.இது தெரியாத ஜோசப், வழக்கம் போல்
காலை எழுந்தவுடன் தெரு பெருக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
குறித்த கடையின் வாசலுக்கு வந்த போதுதான் லொத்தர் சீட்டு ஞபாகம்
வந்துள்ளது. அதனை கொடுத்து விசாரித்த போது அதிஷ்டச் சீட்டு பரிசு விழுந்தது
தெரியவந்துள்ளது, எனினும் தன்னுடைய பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார்.
3 பிள்ளைகளுக்கு தந்தையான ஜோசப், விரைவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு
தனது குடும்பத்துடன் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல
முடிவு செய்துள்ளார்.
மேலும் கடந்த 14 வருடங்களாக தான் பார்த்து வந்த தொழில் ஒன்றும் கேவலமான
தொழில் அல்ல என்றும் கடந்த காலங்களில் தனது ஜீவனோபாயத்தை பூர்த்தி செய்த
இந்தத் தொழிலை தான் மேன்மையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
0 Comments