விண்வெளியில் சர்வதேச ஆய்வு கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதை அமெரிக்கா,
ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து உருவாக்கி வருகின்றன. இதற்கான
கட்டுமான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் மற்றும் உணவு பொருட்களை
எடுத்துச் செல்ல ராக்கெட்டுகள் பயன்படுத்தப் படுகின்றன.
அதற்கு அதிக
அளவில் செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில் விண்வெளி செல்ல புதிய வகை தொழில்
நுட்பத்துடன் அதி நவீன ‘ரோபோடிக் கார்’ தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதை
ஜப்பானின் மிகப் பெரிய ‘ஒபாயாசி’ என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது
கார்பன் நானோ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இது உருக்கு உலோகத்தை
விட 100 மடங்கு உறுதியானது.
‘ரோபோட்டிக் கார்’ அதிக சக்தியுடன் இயங்க கூடியது. இதன் மூலம் 96 ஆயிரம் கி.மீட்டர் உயரம் விண்வெளியில் பயணம் செய்ய முடியும்.
இதில்,
விண்வெளிக்கு ஆட்களும், பொருட்களையும் ஏற்றிச் செல்லலாம். விண்வெளிக்கு 7
நாட்களில் செல்லலாம். தற்போது விண்வெளி மையத்துக்கு விண்கலம் மூலம்
பொருட்களை எடுத்து செல்ல ஒரு கிலோவுக்கு ரூ.13 லட்சம் வரை செலவாகிறது.
ஆனால்,
இதில் ஏற்றி சென்றால் ஒரு கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே செலவாகும்.
இதன் கட்டுமான பணி முடிந்து வருகிற 2050–ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை ஜப்பானின் ஒபாயாஷி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேலாளர் யோஷி இஷிகவர் தெரிவித்துள்ளார்.
0 Comments