குருநாகல் நிக்கதளுபொத்த பகுதியில் நான்கரை வயது சிறுமி கடத்தப்பட்ட
சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று பிற்பகல் குருநாகல் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட் ௩௧ வயதான காமினி எனும் சந்தேசக நபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அரம்பத்தில் புதையல் ஒன்றைஎடுப்பதற்கு பலி கொடுக்கவே சிறுமியை கடத்தி இருக்க வேண்டும் என சந்தேகம் நிலவியது எனினும் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சிறுமி கேஷணியை பெரியவள் ஆகியவுடன் திருமணம் செய்து கொள்ளவே கடத்தினேன் என சந்தேக நபரான காமினி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகபரின்
தாய் உள்ளிட்ட இருவர் நேற்றிரவு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி:நேத்FM


0 Comments