Subscribe Us

header ads

பிள்ளைகள் காடையர்களாகவும் காடையர்களுக்காகவுமா ?

- வளரிளம் பருவ வாலிபனின் அறைகூவல் -

பிள்ளைகளை காடையர்களாகவும் காடையர்களுக்காகவும் தாரை வார்க்கும் பெற்றோரே...

பன்னெடுங்கால சரித்திரத்தைக்கொண்ட புத்தளம் மாநகரம். பல நல்லவர்களை உருவாக்கியிருக்கின்ற தாய் நகரம்.

முன்னைய காலங்களில் இருந்த ஒழுக்கங்களும் மரியாதைகளும் தற்காலத்தில் அடியோடு மறைந்து செல்கிறது.

பருவ வயதை அடைந்தவர்களினதும் அடையாத சிறுவர்களினதும் தோற்றங்களும், முகபாவனைகளும் பாவனைகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகாத அமைப்பையே கொண்டிருக்கின்றன.

கழுத்கில் சங்கிலிகளையும் குளிக்காதவன் தலை போன்ற தலைமுடிக்கு சாயங்களையும் பூசிக்கொண்டு, அசிங்கமான தோற்றத்தோடு வீதிகளிலும் பொது இடங்களில் உலா வரும்போது.. வேற்றுக் கிரகவாசிகளோ? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

இளைஞர்களை வளர்க்கும் பெற்றோர்களே, பிள்ளைகள் உங்களுக்கு அல்லாஹ்வால் கிடைத்த வரம், சொத்து. அதை துஸ்பிரயோகம் செய்வது மறுமையில் கண்டிக்கத்தக்கது.

உங்களது பிள்ளைகள் சேரும் நண்பர்கள் விடயத்தில் அவதானத்துடன் கண்காணிப்புடன் இருங்கள். தகுந்த வயதினரோடு சேர விடுங்கள். இது பற்றி மறுமையில் கேள்விக்கணைகள் உங்களுக்கு அதிகம் அதிகம் உண்டு. இது விடயத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருங்கள்.

பாமர மக்களுக்கு இதை எத்தி வைக்கின்ற பொறுப்பு, சமூகத்தில் உள்ள தலைமைகளுக்கும் ஆர்வலர் குழுக்களுக்கும் படித்தவர்களுக்கும் உள்ளது.

"ஒருவருக்கு நல்லதை கற்பித்து அதை அவர் தொடர்ந்து செய்யும் போதெல்லம் கற்பித்தவருக்கு நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்" (நபி மொழி)

ஆகவே பாமரர்களுக்கு எத்தி வைக்கும் விடயத்தில் முந்திக்கொள்வோர் யார்,

*|* முஸ்லிம் தலைமையா?

*|* ஊர் தலைமையா?

*|* ஆர்வலர் குழுக்களா?

*|* மார்க்கம் கற்றவர்கள?

முன்வாருங்கள்! நன்மைகளுக்காக!

(அம்ஹர் ஹுஸைன், புத்தளம்)
Thanks to: The Puttalam Times 

Post a Comment

0 Comments