கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (5) நாடளாவிய ரீதியில்
நடைபெறவுள்ளது. இதில் இம்முறை 2 இலட்சத்து 96 ஆயிரத்து 313
பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு. எம். என்.
ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 62 ஆயிரத்து 116 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். நாடு
முழுவதுமுள்ள 2 ஆயிரத்தி 120 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெற
வுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments