மருத்துவத் துறையில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என பல சிகிச்சை முறைகளை நோயாளிகள் பெற்று வருகின்றனர். இவற்றுள் யூனானி மருத்துவமும் ஒன்றாகும். மேலைத்தேய மருத்துவத்தில் சுகப்படுத்த முடியாது என கைவிடப்பட்ட சில நோய்களையும் யூனானி மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஏ.எல்.எஸ்.ரஸானா.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவம் பற்றிய சிறிய அறிமுகத்தை தாருங்கள்
யூனானி மருத்துவ முறை என்பது அடிப்படை மருத்துவ அல்லது கீழைத்தேயமருத்துவ (Traditional Medicine or Eastern Medicine) வகைகளில் ஒன்றாகும். அதாவது மனிதனது நோய்களையும் அதற்கான அடிப்படை காரணங்களையும் கண்டறிந்து அந்த காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதே இந்த மருத்துவ துறையின் சிறப்பம்சமாகும்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகின்றது?
இந்த மருத்துவ முறையில் மனித உடல்களில் இயற்கையாகவே அமைந்துள்ள இரத்தம், சளி, பித்தம், கரும்பித்தம் என்பவற்றுக்கும் மனிதர்களை சூழவுள்ள நிலம், நீர், தீ, காற்று என்பவற்றுக்கும் இடையில் சமச்சீர் அற்ற நிலைமை ஏற்படும் போது அதன் குண குறிகளின் வெளித்தோற்றமே நோய்களாக தென்படுகின்றன. எனவே இவற்றினை சமப்படுத்தி சீர்செய்து வாழ வைக்கவே யூனானி மருத்துவம் முயற்சிக்கின்றது . மேலும் இத்துடன் பரம்பரையியல் (heveditory) பெரும்பாலும் சம்பந்தப்படுகிறது. சுத்தம் முக்கியமானதாக கொள்ளப்படுகிறது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவ முறைமையில் ஒரு நோயை அடையாளம் காணும் முறை எவ்வாறு அமையும்?
பொதுவாக நோயாளிகளைப் பார்த்து, கேள்விகளைக் கேட்டு, தொட்டுப் பார்த்து, தட்டிப் பார்த்து, மேலும் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு (observation, interrogation, palpation, Auscultation, investigation) நோய்களை கண்டு பிடித்து அதற்கான அடிப்படை மருந்துகளை வழங்குகின்றோம். மேற் சொன்ன முறைகளில் நோயாளிகளை பரீட்சிக்கும் போது மனித உடலின் உட்புற நோய்க் காரணிகளை கண்டுபிடித்து இயற்கையான வெளிக்காரணங்களையும் கருத்தில் கொண்டு மருத்துவம் செய்யப்படுகின்றது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவம் பெற்றுக் கொள்வதற்கு வயதெல்லை ஏதும் உண்டா?
இயற்கையான மூலகங்களையும் மூலிகைகளையும் அடிப்படையாகக் கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவை வில்லைகளாகவும், தூள்களாகவும், லேகியம், பாணி முறையிலும் கொடுக்கப்படும். இவை மனித உடல் தன்மைகளையும் வயது வேறுபாடுகளையும் கொண்டு வேறுபடலாம். வயதுக்கேற்றவாறு அளவுகளும் வித்தியாசப்படலாம்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவத்தில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமா அது பற்றிய விளக்கத்தையும் தாருங்கள்?
இதில் ஒவ்வொருவரினதும் உடல் தன்மைக்கு ஏற்றவாறு உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஒவ்வாமையும், மேலும் நோய்களும் ஏற்படலாம். பொதுவாக சமநிலை உணவு (balancing diet) மேற்கொள்ளப்படின் சமாளித்து வாழலாம். அளவுக்கு மீறிய உடல் பருமனை குறைக்க மூலிகை மருத்துவம் உள்ளதுLike US: https://www.facebook.com/kalpitiyavoice.
ஏனைய மருத்துவ முறைகளால் தீர்வு காணமுடியாத ஏதேனும் நோய்களுக்கும் யூனானி மருத்துவத்தில் தீர்வு உண்டா?
மேலைத்தேய மருத்துவத்தில் கைவிடப்பட்ட, சுகப்படுத்த முடியாது என
கைவிடப்பட்ட சில நோய்களும் இம்மருத்துவ முறையில் குணமாக்கப்படும்.
உதாரணமாக பாரிசவாதம், முடக்குவாதம், தொய்வு நோய், நரம்புத்தளர்ச்சி
முதலானவை. Like US: https://www.facebook.com/kalpitiyavoice
யூனானி மருத்துவ முறையில் தோல் நோய்க்கான சிகிச்சைகள் ஏதாவது உண்டா ? அது தொடர்பாகவும் சிறு விளக்கம் தாருங்கள்?
யூனானி மருத்துவத்தில் தோல் நோய்களுக்கு விசேடமான மருந்துகள் உள்ளன. முகப் பருக்கள், வடுக்கள், சொறி, சிரங்கு, நாட்பட்ட czema chronic rashes என்ற நோய், நிறமாற்றங்கள், ஒவ்வாமை, நகச்சுற்று, சேற்றுப்புண்கடி, அடி தகர்வை, "Psoriasis" எனும் குஷ்ட நோய் முதலான பல நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் இம்மருத்துவ முறையில் உள்ளன.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இன்றைய காலப்பகுதியில் பெண்கள் அதிகமாக தமது சருமம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர் அவர்களுக்கு சில ஆலோசனை கூறுங்கள்.
பெண்கள் ஆண்களை விட சருமத்தில் அக்கறை செலுத்துவது வழக்கம். எனினும் பெண்கள் தமது உணவு முறைகள், சரும நலம், உடல் பயிற்சி பற்றி பேணாமல் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கும் அலங்கார பசைகளையும், லோசன்களையும், சோப்களையும் பாவிப்பதானது கவலை தருகின்றது. நீராகாரம், பழங்கள், கீரை, பால் இவற்றை ஒழுங்காகவும் அதிகமாகவும் உட்கொண்டாலே சருமம் அழகாகவும் மென்மையாகவும் அமையும். விட்டமின் E, Omega, மாதுளம்பழம், உட்கொள்ளாமல் சருமத்தில் தடவுகின்றார்கள். இவற்றை நாம் உள்ளே எடுத்தால் தான் அவை இரத்த சுற்றோட்டத்தை அடைந்து தோல் கலங்களையும், மயிர் கலங்களையும் சென்றடையும் என்பதை பெண்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன். தோல் நோய்களுக்கு தெரிவு செய்து தயாரிக்கப்பட்ட மூலிகைகளான மருந்து பசைகளை பாவிப்பதால் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம். Like US: https://www.facebook.com/kalpitiyavoice
தொடர்புகளுக்கு:-
Dr. A.L.S. Razana
I.S.D - Coroner & J.P
(Tel- 0716066848)
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------



0 Comments