Subscribe Us

வரலாற்றில் இன்று: மே 06

1527: இத்தாலியின் 5 ஆம் ஜோர்ஜ் மன்னரின் படைகளை ஸ்பானிய மற்றும் ஜேர்மன் படைகள் தோற்கடித்தன.

1536: ஆங்கில மொழிமூல பைபிள் நூல் ஒவ்வொரு தேவாலயத்திலும் வைக்கப்பட வேண்டுமென 8 ஆம் ஹென்றி மன்னர் கட்டளையிட்டார்.

1542இந்தியாவில் போர்த்துக்கேய தலைநகராக விளங்கிய கோவாவை பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் சென்றடைந்தார்.

1757: பர்மாவில் 17 வருடகால சிவில் யுத்தம் முடிவுற்றது.

1889: ஈபிள் கோபுரம் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்பட்டது.

1910 :பிரித்தானிய மன்னர் 7 ஆம் எட்வர்ட் காலமானதையடுத்து 5 ஆம் ஜோர்ஜ் புதிய மன்னரானார்.

1937:ஜேர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஹிண்டன்பேர்க் எனப் பெயரிடப்பட்ட ஆகாயக் கப்பல் (ஸெப்பளின் எனும்) நியூஜேர்ஸியில் தரையிறங்கியபோது தீப்பற்றியதால் 36 பேர் உயிரிழந்தனர்.

1942: பிலிப்பைன்ஸில் கடைசித் தொகுதி அமெரிக்கப் படையினர் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.

1954: ரோஜர் பென்னிஸ்டர், ஒரு மைல் தூர ஓட்டப்போட்டியை 4 நிமிடங்களுக்குள் கடந்த முதல் பெண் எனும் சாதனைக்குரியவரானார்.

1960: பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத்தின் சகோதரி மார்கரெட்டின் திருமண வைபவத்தை தொலைக்காட்சி மூலம் 2 கோடி பேர் பார்வையிட்டனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதலாவது அரச குடும்ப திருமணம் இது. 

1976: இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 989 பேர் உயிரிழந்தனர்.

1983: ஜேர்மனிய சர்வாதிகாரியின் நாட்குறிப்பென கூறப்பட்ட நாட்குறிப்பு போலியானது என நிபுணர்கள் அறிவித்தனர்.

1994: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாயில் நிர்மாணிக்கப்பட்ட கடலடி சுரங்கப் பாதையை பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் அரசியும் பிரெஞ்சு ஜனாதிபதி பிராங்சுவா மிட்டராண்டும் திறந்துவைத்தனர்.

1994: வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான பௌலா ஜோன்ஸ், அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு வழக்குத் தொடுத்தார்.

1996: சி.ஐ.ஏ. முன்னாள் பணிப்பாளர் வில்லியம் கொல்பி, காணாமல் போய் 8 நாட்களின்பின் அவரின் சடலம் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள ஆற்றங்கரையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

1997: இங்கிலாந்து வங்கி, அரசியல் கட்டுப்பாட்டுடிலிருந்து விடுவிக்கப்பட்டது.
அவ்வங்கியின் 300 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் அது.

2001: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பர், சிரியாவுக்கான விஜயத்தின்போது
பள்ளிவாசலொன்றுக்குச் சென்றதன் மூலம் பள்ளிவாசலுக்குச் சென்ற முதலாவது பாப்பரசரானார்.

2013: அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் சுமார் ஒரு தசாப்த காலமாக காணாமல் போயிருந்த 3 பெண்கள் ஏரியல் கஸ்ட்ரோ எனும் நபரினால் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்
மீட்க்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments