ஐசிசி ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்கள் நாளை (08) மாலை 4 மணி அளவில் இலங்கையை வந்தடையவுள்ளனர்.
இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நீர்கொழும்பு பழைய வீதி
ஊடாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் இறுதிப் போட்டியுடன் டுவன்ரி 20
போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன
ஆகியோருக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 Comments