எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னாரில் இருந்து கல்பிட்டிக்கு
தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பாவனையில்
உள்ளது.இருந்தும் பாவனைக்கு ஏற்ற பஸ்களாக அமைய வில்லை என பயணிகள் கவலை
தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஆலங்குடாவில் இருந்து
மன்னாருக்கு செல்கின்ற பஸ்கள் வாரத்தில் மூன்று தடவையாவது காட்டு பகுதி
மற்றும் பாதை நடுவில் பழுதடைகின்றது எனவும் இதனால் நாங்கள் குறித்த
நேரத்தில் அலுவலகத்திற்கும் மற்றும் ஏனைய இடத்திற்கும் செல்ல முடியாமல்
உள்ளது.
மேலும் தெரிவிக்கையில் கடந்த
வாரம் ஓயாமடு வீதியின் ஊடாக பயணித்த வேலை இரண்டு தடவை பழுதடைந்தது எனவும்
பஸ் நடத்துனர் பயணிகளுக்கு மீதி பணம் கொடுக்;கவில்லை எனவும் தெரிவித்தனர்.
எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்களின் பிரச்சினையினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அரச அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments