Subscribe Us

header ads

வறுமையிலும் சாதித்து காட்டிய முஸ்லிம் மாணவி (படங்கள் இணைப்பு)

ரத்மலானை  ஹிந்துக் கல்லூரியில் 20 வருடத்திற்கு பிறகு மொரட்டுவைப் பகுதியில்  வறுமை கோட்டில் வாழும் பாத்திமா சாமிலா க.பொ.சா.தரத்தில் சகல பாடங்களிலும் 9 A எடுத்துள்ளார்.

கொழும்பு ஜேனலிஸ்ட் அசியோசின் அம்மாணவிக்கு பரிசுப்பொருளையும் பாராட்டுதலையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கொழும்பு ஜேனலிஸ் அசியோசியன் தலைவர் அஸ்லம் செயலாளர் அஸ்ரப் ஏ சமத், பொருளாளர் இம்தியாசும் கலந்து கொண்டனர். கல்லூரி அதிபர் எஸ. ஜெயக்குமார். வகுப்பாசிரியர் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இம் மாணவியின் சகோதரியும் இப்பாடசாலையிலேயே உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்கின்றார். மொரட்டுவையில் வீடொன்று இல்லாமால் ஒரு அரையுள்ள வீட்டில் இருந்தே நாங்கள் கல்வி கற்கின்றோம் என இம் மாணவி தெரிவிக்கின்றார். 


Post a Comment

0 Comments