(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சுமார் முப்பது வருட காலமாக நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் நடைபெற்று வந்த கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர் தாய் பிள்ளைககளாக சுதந்திரக் காற்றைச்
சுமார் முப்பது வருட காலமாக நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் நடைபெற்று வந்த கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர் தாய் பிள்ளைககளாக சுதந்திரக் காற்றைச்
சுவாசித்து வருகின்ற வேளையில்
இந்நாட்டிற்கும், இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் மற்றுமொரு சாபக்கேடாக
பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, ராவண பலய என்னும் பெயர்களைக் கொண்ட சில
பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் பொருளாதாரம்,
கலாச்சாரம், வணக்கஸ்தலங்கள், அடிப்படை மத வழிபாட்டு உரிமைகள்
போன்றவற்றையும் பகிரங்கமாகவே அடக்கியொடுக்க முற்பட்டும், சூறையாடி வருவதும்
இன்று உலகறிந்த விடயமாகும்.
இதற்கு உதாரணமாக புலம்பெயர்ந்த மக்களாக
நமது பிரித்தானியாவிலும் மற்றும் சர்வதேச நாடுகளிலும் வாழ்ந்து வரும்
இலங்கை முஸ்லிம் சமூகத்தினருக்கு பின்வரும் துன்பியல் நிகழ்வுகளை நாம்
பட்டியலிட்டு முன்வைக்க விரும்புகின்றோம்.
01) 2011ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் பத்தாம் திகதி பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் அனைவரும் கைகட்டி
வேடிக்கை பார்த்து நிற்க பௌத்த பிக்குகளின் தலைமையின் கீழ் அத்துமீறி
நுழைந்த ஒரு பேரினவாதக் குழுவினர் அனுராதபுரம் – குருநாகல் வீதியில்
அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் தர்கா எனப்படும் முஸ்லிம் பெரியார் ஒருவரின்
அடக்கஸ்தலத்தை முற்று முழுதாக இடித்துத் தகர்த்து அழித்தனர்.
02) குருநாகல் மாவட்டம் வெல்லவ
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் அமைந்துள்ள அல் அக்ரம்
தைக்கியாவில் சிங்களப் பேரினவாதக் காடையர்களால் கடந்த 2012ம் ஆண்டில் புனித
ரமழான் கால வணக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது. தெதுறு ஓயாவிலுள்ள
கிரிந்திவேல்மட விகாரையின் விகாராதிபதியின் தலைமையில் அப்பிரதேசத்தைச்
சேர்ந்த பிக்குகள் அடங்கலாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட
பெரும்பான்மையினத்தவர்கள் இப்பள்ளிவாயிலின் வளவிற்குள் அத்துமீறி நுழைந்து
கதிரைகளில் அமர்ந்தவாறு பிரித் பாராயணம் செய்து தொழுகைக்கு இடையூறை
ஏற்படுத்தினர்.
இப்பள்ளிவாயில் 1994ம் ஆண்டு
ஸ்தாபிக்கப்பட்டு முஸ்லிம் சமயக் கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு
செய்யப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும். இருந்தபோதிலும், இச்சம்பவம் நடைபெற்ற
வேளையிலும், நடந்து முடிந்த பின்னரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
அதிகாரிகள் யாரும் பள்ளிவாயில் காணிக்குள் அத்துமீறி உட்பிரவேசித்த பௌத்த
பிக்குகளை வெளியேற்றவோ அல்லது முஸ்லிம்களின் தொழுகைக்கு இடையூறு
விளைவித்ததைத் தடுத்து நிறுத்தவோ எந்தவொரு முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை
என்பது வேதனையோடு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
03) 2012 ஏப்ரல் மாதம் இருபதாம்
திகதி பட்டப்பகலில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்புத் தரப்பினர் கடமையில்
இருக்கும்போதே தம்புள்ள நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில்
தகர்க்கப்பட்டது. இவ்வன்முறைச் சம்பவம் தம்புள்ளை ரன்கிரி ரஜமகா விகாரையின்
பீடாதிபதி இனாமளுவ ஸ்ரீசுமங்கல தேரரின் தலைமையில் வழிநடாத்தப்பட்டது.
பொலிசாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க சுமார் நூறு பேர் வரையிலான
பெரும்பான்மையினக் காடையர்கள் பள்ளிவாயிலுக்குள் அத்துமீறி உட்சென்று
அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து
வெளியேறினர். இதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் அப்பள்ளிவாயிலில் ஐவேளை
தொழுகைகள் நடைபெறுவதற்கும் கூட பாரிய அச்சுறுத்தல்களே காணப்படுகின்றன.
இச்சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில்
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரன்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ
ஸ்ரீசுமங்கல தேரர் ‘இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் இங்கே விரும்பினால்
இருக்கலாம். இல்லாவிடில் எங்காவது சென்று விட வேண்டும். காகம் தலைக்கு மேல்
பறக்கலாம் ஆனால் தலையில் கூடு கட்ட எத்தனிக்கக் கூடாது’ என்று தனது
பேரினவாத இனத்துவேசத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.
இவ்வன்முறைக்கு உந்து சக்தியாக
தம்புள்ளையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரன்கிரி குஆ என்னும் ஓர் தனியார்
வானொலி சுமார் ஆறு மாத காலமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கருத்துக்களை
தொடர்ந்தேச்சியாகவே கொப்பளித்து வந்தது. இஸ்லாமிய ஷரீஆச் சட்டம், இஸ்லாமிய
வணக்க வழிபாடுகள் போன்றவற்றை எள்ளி நகையடுவதையே இந்த வானொலி தனது முழு
நேரப் பணியாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. இப்போதும் அவ்வப்போது செயற்பட்டே
வருகிறது.
04) 2012 ஓகஸ்ட் 30ம் திகதி
கோகிலவத்தை என்னும் ஊரிலுள்ள அல்-இப்ராஹிமிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில்
மஃரிப் தொழுகைக்கு அவ்வூர் முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில்
பெரும்பான்மையின வாலிபர்கள் இருவர் மது போதையுடன் பள்ளிவாயலுக்குள்
அத்துமீறி நுழைந்து அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களைத் தாக்கி பள்ளிவாயிலில்
இருந்த பொருட்களையும் துவம்சம் செய்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பில்
பள்ளிவாயில் நிருவாகிகள் பொலிசாரிடம் முறையிட்டபோதும் குறித்த சம்பவத்தில்
தொடர்புபட்ட வாலிபர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை.
05) 2012 மே மாதம் குருநாகல் ஆரிய
சிங்களவத்தையிலுள்ள உமர் இப்னு ஹத்தாப் பள்ளிவாயிலில் தொழுகை
நடாத்துவதற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டது. இப்பள்ளிவாயில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக
அவ்விடத்தில் அமைதியாக இயங்கி வந்த போதிலும் கடந்த 2012 மே மாதமே
இப்பிரச்சினை அங்கு உருவெடுத்துள்ளது.
06) கடந்த 2012 ரமழான் மாதம்
ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்தக்கூடாதென்று பௌத்த
தேரர்கள் குழுவொன்று திரண்டு வந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத்
தொடர்ந்து அப்பள்ளிவாயிலில் ஐங்காலத் தொழுகைக்கும் இடையூறுகள் ஏற்படுவதால்
மக்கள் அங்கே தொழுகைக்காகச் செல்வதில்லை. எனவே இன்றளவும் ராஜகிரிய தாருல்
ஈமான் பள்ளிவாயில் மூடப்பட்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது.
07) 2012 மே மாதம் தெகிவளை கல்
விகாரை வீதியிலுள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாயிலில் முஸ்லிம்கள் தொழுவதற்கு
தடைவிதிக்குமாறு கோரி கல் விகாரையிலுள்ள பௌத்த தேரர்கள் தலைமையில் பாரிய
ஆர்ப்பாட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்திற்கு காரணமாக
இப்பள்ளிவாயல் மாடுகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் மடுவமாகத்
தொழிற்படுகின்றது என்ற பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டையே பேரினவாதிகள்
முன்வைத்தனர். இதன் காரணமாக அப்பள்ளிவாயல் இன்று வரைக்கும் மூடப்பட்ட
நிலையிலேயே காணப்படுகிறது.
08) 2012 ஒக்டோபர் 27ம் திகதி
முஸ்லிம்களின் பெருநாள் தினமான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று அனுராதபுரம்
புதிய நகர் மல்வத்துஓயா லேனிலுள்ள தைக்காப் பள்ளிவாயல்
தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பல
பெறுமதிமிக்க உடைமைகள் முற்றாக அழிந்து போயின. இதனைத் தொடர்ந்து எரிகிற
நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் ‘அபிவிருத்திப் பணிகளுக்காக இப்பள்ளிவாயில்
உடைக்கப்படும்’ என்று அனுராதபுரம் மாநகர மேயர் தெரிவித்தார். ஆனால்
பள்ளிவாயில் தீகிரையாக்கப்பட்டது தொடர்பில் இதுவரை பொலிசாரினால் யாரும்
கைது செய்யப்படவில்லை. எந்தவொரு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படவுமில்லை.
09) 2012 ஓகஸ்ட் மாதம் புத்தளம்
கற்பிட்டிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் தனித்து வாழும் பகுதியில்
திடீரென்று புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. சிங்கள மக்களே இல்லாத ஒரு
ஊரில் புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கு சென்று வழிபடுவதற்காக
வெளிப்பிரதேசங்களிளிருந்து மக்கள் அனுப்பப்படுகின்றனர். இதனால்
இப்பிரதேசத்தில் எந்நேரமும் இனகலவரம் தோன்றலாம் என்ற அச்சத்தில் ஈரின
மக்களும் இன்றுவரை அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
10) பதுளை நகரிலுள்ள ஒரு முஸ்லிம்
வர்த்தகரின் கடையில் விற்பனை செய்யப்பட்ட கையுறைகளில் புத்தரின் சின்னம்
பொறிக்கப்பட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்கடையின் உரிமையாளரையும், ஊழியர்
ஒருவரையும் பொலீசார் கைது செய்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ‘பொதுபல சேனா’
அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமையில் சுமார் நூற்றைம்பது
பேர் வரையில் கலந்து கொண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டது.
இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள்
இருபதுக்கும் குறைவானவர்களே காணப்பட்டனர். ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில்
இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட
பேரினக் காடையர்கள் பலர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கீழ்த்தரமான
இழிவான வார்த்தைகளால் கோஷமெழுப்பி பகிரங்கமாகவே அவதூறு செய்ததுடன் பதுளை
நகரில் ஜும்ஆத் தொழுகையை முடித்துவிட்டு வீதியால் சென்று கொண்டிருந்த
இரண்டு முஸ்லிம்களும் பேரினவாதக் காடையர்களால் தாக்கப்பட்டு அவர்கள்
பயணித்த முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப்பட்டது.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு ஆடுகள்
அதே பேரினவாதக் காடையர்களால் திருடிச் செல்லப்பட்டு பின்னர் கழுத்துக்கள்
வெட்டப்பட்டு இறந்த நிலையில் அவ்வாடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற
முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை வெகுவாகக் காயப்படுத்தும் சுமார்
பதினைந்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் இன்று வரைக்கும் பதுளை நகரில்
பகிரங்கமாக நடடைபெற்றுள்ளன. எனினும் இதுவரைக்கும் இச்சம்பவங்கள் தொடர்பில்
எதுவித சட்டம் ஒழுங்கைப் பேணும் நடவடிக்கைகளோ விசாரணைகளோ இடம்பெறவில்லை.
11) சகல இன மக்களும் எதுவித
முரண்பாடுகளும் இன்றி மிகவும் அன்னியோன்யமாக வாழும் ஓர் வரலாற்றுச் சிறப்பு
மிக்க இடம்தான் கண்டி மாநகரமாகும். அங்கே கடந்த 07.12.2012 அன்று பிரதான
வீதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் போலீசார் நடமாடுகின்ற முக்கிய இடங்களில்
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் பல
ஒட்டப்பட்டன. இச்சுவரொட்டிகளில் ’2025ம் ஆண்டில் இலங்கை சபரிஸ்தான்
(என்னும் ஒரு முஸ்லிம்) நாடாக மாறும். (இனியும்) முஸ்லிம்களின் கடைகளில்
பொருட்களை வாங்குவோமா?’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலே விவரிக்கப்பட்ட பேரினவாத
அடக்குமுறைகளில் தற்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒன்றுதான்
கையடக்கத் தொலைபேசிகளில் உலாவருகின்ற ஓர் அநாமதேயக் குறுந்தகவல் (ளுஆளு)
ஆகும். இக்குறுந்தகவல் கண்டி, குருநாகல், கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம்
ஆகிய பிரதேசங்களிலுள்ள பெரும்பான்மையின மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு
அதிகளவில் வந்தடையக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது.
-2032di sinhala jathiyata wada muslim
jathiya 53% wenawa, ape sinhala rata unta nithiyen aithi wenawa.danma
muslim kadawalin badu ganna eka nathara karamu,halal lakuna sahitha badu
warjanaya karamu,unta ape idakadan wikunanna epa,thambith ekka wiwaha
epa..etisalat wani ayathana walin palli hadanna wisala lesa mudal
denawa,fashion bug,nolimit walin redi ganna epa,ape rata beragamu,obath
niyama sinhalayeknam meka sinhalunta yawanna - என்பதுவே
அக்குறுந்தகவலில் காணப்படும் இனவாத வாசகமாகும்.
இதன் தமிழாக்கம்: ’2032ல் சிங்கள இனத்தை
விட முஸ்லிம் இனம் 53மூ ஆகும். நமது சிங்கள நாடு அவன்(ர்)களுக்கு
நிரந்தரமாக சொந்தமாகிவிடும். இப்பொழுதே முஸ்லிம் கடைகளில் பொருட்களை
கொள்வனவு செய்வதை நிறுத்துவோம். ஹலால் சின்னம் உள்ள பொருட்களை
பகிஷ்கரிப்போம். அவ(ன்)களுக்கு நமது காணிகளை விற்க வேண்டாம்.
தம்பி(முஸ்லிம்)களோடு விவாகம் வேண்டாம். எடிசலாட் போன்ற நிறுவனங்கள்
பள்ளிவாயில்கள் அமைப்பதற்கு பெருந்தொகையான பணம் வழங்குகின்றன, பெஷன் பக்,
நோ லிமிட் போன்ற இடங்களில் உடுப்பு வாங்க வேண்டாம், நமது நாட்டை
பாதுகாப்போம். நீங்களும் உண்மையான சிங்களவர்கள் என்றால், இதை
சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்.’
இதனைத் தொடர்ந்து கண்டி மாநகரில் பொதுபல
சேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய மார்க்கத்திற்கு
எதிராகவும் நடாத்தப்பட்ட மாபெரும் இனவாத மாநாடு ஒன்றும் இவ்விடத்தில்
சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இக்கூட்டத்தில், ‘இலங்கையில் இருந்து
ஹலால் சான்றிதழ் முறைமையும் ஹலால் சின்னமும் இன்னும் அதனோடு தொடர்புபட்ட
சகல செயற்பாடுகளும் விரைவில் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு
நிறுத்தப்படவில்லையானால் எமது பௌத்த இளைஞர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தும்
அதனை நிறுத்துவார்கள்’ என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகோடா அத்தே
ஞானசார தேரரினால் மிகவும் கடுமையான, காட்டமான தொனியில் முஸ்லிம்களின்
உள்ளுணர்வுகளைத் தீண்டும் தோரணையில் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது.
12) கடந்த 2013ம் ஆண்டு மே மாதம்
இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதற்குத் தடைவிதிக்குமாறு கோரி பொதுபலசேனா,
ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களினால்
அரசாங்கத்திடம் ஓர் பிரேரணை கையளிக்கப்பட்டது. இலங்கை அரசு அக்கோரிக்கை
தொடர்பில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னால் அதே மாதம் வெசாக்
பண்டிகை தினத்தன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக 35 வயதான போவத்த
இந்திர இரதன் தேரர் என்ற சிங்களக் கடும்போக்குவாத அமைப்பைச் சேர்ந்த ஓர்
தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு இறந்தார்.
பொதுவாக மத்திய இலங்கையில் கண்டி
மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கண்டி மாநகரமானது முஸ்லிகளின் வர்த்தகக்
கேந்திர மையமாக விளங்குகின்ற ஓர் நகராகும். அப்பிரதேசத்தில் இவ்வாறான
முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பிரேரனைக்காக ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்த
துறவியொருவர் தீக்குளித்து இறந்து போனால் அதனை வைத்து சிங்கள, முஸ்லிம்
உறவில் ஓர் பாரிய விரிசலை ஏற்படுத்த முடியும் என்ற சிங்கள இனவாதிகளின்
எதிர்பார்ப்பு அங்கே பலிக்கவில்லை. காரணம் கண்டி மாவட்டத்தில் சிங்கள,
முஸ்லிம்களின் உறவுப்பாலம் தொன்று தொட்டே பலமாகக் காணப்படுகின்றமையாலும்
அங்கே ஈரின மக்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்கின்ற காரணத்தாலும்
இவ்வாறான சூழ்ச்சியாளர்களின் விடயத்தில் அப்பிரதேச மக்கள் விழிப்புணர்வுடன்
இருந்து வருகின்றனர்.
மேலும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில்
இலங்கைத் தாயகத்திலுள்ள அதிகமான பள்ளிவாயில்கள், மதரசாக்கள் மற்றும் தஃவா
அமைப்புக்களின் முழு விபரங்களும் உளவுத்துறையினரால் சேகரிக்கப்பட்டமையும்
இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். இலங்கையில் சமய, சமூக சேவைகளைச்
செய்து வருகின்ற இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், மற்றும் வெளிநாட்டுத்
தொடர்புகளுடன் கூடிய தனிநபர்கள் ஆகியோரிடம் உளவுத்துறையினரின் விசாரணைகள்
மிகவும் அதிகமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இலங்கையில் விடுதலைப் புலிகள்
செயற்பட்டு வந்த காலப்பகுதியில் நாட்டின் வடக்குப் பிரதேசம் எவ்வாறானதொரு
கண்கொண்டு அரசாங்கத்தினால் நோக்கப்பட்டதோ அதற்கு சற்றும் குறையாத
விதத்திலேயே இன்றளவும் கிழக்கு மாகாணம் அரச பாதுகாப்புத்தரப்புக்களினாலும்,
உளவுத்துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்க
ஒன்றாகும்.
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி,
மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில்,
கிண்ணியா, மூதூர், கந்தளாய் போன்ற கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்
செறிவாக வாழுகின்ற ஊர்களிலுள்ள பள்ளிவாயில்கள், மதரசாக்கள் மற்றும் தஃவா
அமைப்புக்களின் வருமான விபரம், வெளிநாடுகளுடன் உள்ள தொடர்புகள்,
மௌலவிமார்களின் விபரங்கள் போன்றவை மிகத்துல்லியமாகக் கணிக்கப்பட்டு அதன்
மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்கள் மற்றும் மார்க்கப் பிரச்சாரத்தில்
ஈடுபடுகின்ற அனைவரினதும் தகவல் சேகரிப்புகள் புலனாய்வுத் துறையினரால்
பேணப்பட்டு வருகின்றமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
இதேநேரம் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கமைய
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டதையடுத்து அம்மாகாணத்தில்
இருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்று தென்னிலங்கைப் பிரதேசங்களில்
வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களில் கணிசமானவர்கள் தற்போது வடக்கிலுள்ள
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலுள்ள தமது
பூர்வீகக் காணிகளுக்குச் சென்று மீள்குடியேற ஆர்வங்காட்டி வருகின்றனர்.
எனினும் பொதுபல சேனா போன்ற பௌத்த தீவிரவாத
கடும்போக்காளர்கள் இப்போது வட மாகாணத்திற்கும் சென்று அங்கு முஸ்லிம்களை
மீளக் குடியமர்த்தக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த பல நாட்களாக தமது சொந்த இடங்களில்
மீள்குடியேற விரும்பிச் சென்றுள்ள மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள்
விடயத்திலும் பொதுபலசேனா அமைப்பினர் தமது கடும்போக்குச் செயற்பாடுகளைக்
கட்டவிழ்த்துள்ளனர். இவர்களின் இவ்வாறான பௌத்த போதனைக்கு விரோதமான அடாவடிச்
செயற்பாடுகளைக் கண்டிப்பதற்காக மனிதாபிமானமுள்ள வடரேக விஜித தேரர் போன்ற
பௌத்த மதகுருமார்களின் ஊடகவியலாளர் மாநாடுகளையும் இந்த பொதுபலசேனா
கடும்போக்குவாதிகள் தமது காடைத்தனமான செயற்பாடுகளால் தடைசெய்து
வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம்
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே
முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாத அடக்குமுறையானது நன்கு திட்டமிட்ட முறையில்
அரச ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பது சிறுபிள்ளைக்கும்
தெரிந்த உண்மையாகும். ‘புத்த மதத்தை காப்போம். இது பௌத்தர்களின் பூமி’
போன்ற பேரினவாதத்தைப் பறை சாற்றுகின்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட
ஸ்டிக்கர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முச்சக்கர
வண்டிகளிலும், பொதுமக்கள் நடமாடும் பஸ் நிலையம், சந்தைகள் போன்ற
இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட விடயங்கள்
முஸ்லிம்களுக்கெதிராக நமது இலங்கைத் தாயகத்தில் வேர் விட்டு வளர்ந்து
வருகின்ற பேரினவாத அடக்குமுறைச் சம்பவங்களுக்கு ஒரு சில
எடுத்துக்காட்டுக்களேயாகும்.
இலங்கை நாட்டில் எந்தவொரு மனிதனுக்கும்
எந்தவொரு மதத்தினையும் பின்பற்றி வாழ்வதற்குரிய முழுச் சுதந்திரமும்
அரசியலமைப்பு ரீதியாகவும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலமாகவும்
உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். யாருடைய மத விவகாரங்களிலும் யாரும்
இடையூறு ஏற்படுத்துவது என்பது நாட்டின் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம்
பாரிய குற்றமாகும். அவ்வாறு இடையூறுகளோ தடைகளோ ஏற்படுத்துவதானது
இலங்கையின் மதவுரிமைச் சட்டத்தின் கீழும் பாரிய குற்றமாகவே கருதப்படும்.
ஆனால் இலங்கை நாட்டிற்கும் இந்நாட்டில்
வாழ்கின்ற நான்கின மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற இப்பேரினவாத
செயற்பாடுகள் குறித்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கமோ, அவரின் கட்டளைக்கமைவாகச்
செயற்படும் பாதுகாப்புத் தரப்புக்களோ இது வரைக்கும் வாய் திறக்காமல்
இருந்து வருவதென்பது வெகு ஆச்சரியமானதொரு விடயமேயாகும்.
முஸ்லிம் சமூகத்தின் மீது நாடு முழுவதும்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்பகிரங்கப் பேரினவாத அடக்குமுறைகளுக்கும்,
அச்சுறுத்தல்களுக்கும் எதிராக இதுவரையில் முஸ்லிம் மக்களும், அவர்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைத்துவங்களும் எந்தவொரு
வன்முறைகளிலும் ஈடுபடாமல் பொறுமை காப்பது இலங்கை நாட்டின் ஜனநாயகச்
செயற்பாடுகளில் முஸ்லிம்களுக்குள்ள நம்பிக்கை இன்னும் குறைந்து போகவில்லை
என்பதையே பறைசாற்றுகின்றது.
இப்பேரினவாத அடக்குமுறையாளர்களின் உள்நோக்கம்தான் என்ன?
இலங்கையின் சனத்தொகையானது தற்போது 2
கோடியை கடந்துள்ளதாக அண்மையக் குடிசனக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதே
நேரம், முஸ்லிம்கள் நாட்டின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகமாகவும்
வியாபகம் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாகவே ‘சிங்களத் தாய்மார்;களும்
அதிகமான பிள்ளைகளைப் பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று
அண்மையில் சில பேரினவாத சக்திகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்ததோடு,
சிங்களத் தாய்மார்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறுகின்ற பட்சத்தில்
அவர்களுக்கு விருதுகளும், ஊக்குவிப்புத் தொகைகளும் வழங்கப்படுகின்ற
சம்பவங்களும் இடம்பெற்றும் வருகின்றன.
நாட்டின் சனத்தொகைப் பரம்பலில்
இந்நிலையானது தொடருமானால் எதிர்வரும் காலத்தில் இலங்கை பாதியளவிலேனும்
முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிடும் என்ற ஓர் அர்த்தமற்ற அச்சத்தின்
காரணமாகவேதான் இன்று இவ்வாறான ஒரு சமூகத்தின் மீதான அடக்கு முறைகள் அரச
ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இவ்விடையத்தை தம்புள்ளை பள்ளிவாயிலில்
நடைபெற்ற வன்முறைக்கும், காடைத்தனத்திற்கும் தலைமை வகித்த ரங்கிரி
விகாரையின் விகாராதிபதி இனாமளுவ தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில்
பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருந்தார்.
எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கையின்
பௌத்த சந்ததியை பெருக்க வேண்டுமென்பதற்காகவே தற்போதுள்ள இரண்டாம் நிலை
இனத்தின் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன்
பிரதிபலிப்புக்கள்தான் இன்று ‘பொது பலசேனா’ என்னும் ஓர் அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மையின அப்பாவி இளைஞர்களுக்கு வன்முறையைப்
போதித்து நாட்டின் எதிர்காலத்தையும் சிங்கள மக்களின் குடும்ப, சமூகக்
கட்டமைப்புக்களையும், ஏனைய இன மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும்
சீர்குலைக்கின்ற செயற்பாடுகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
முஸ்லிம்கள் ஆளடையாள அட்டைக்கு தொப்பி
அணிந்து படம் பிடிப்பது பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு
ஏற்படுத்தப்பட்ட தடைகள், பள்ளிவாயில்கள் தகர்ப்பு, சிங்கள மொழி மூல
பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும், மாணவிகளும் எதிர்கொள்ளும் மத,
கலாச்சார, பண்பாட்டு ரீதியான திட்டமிட்ட சவால்கள் போன்ற
முஸ்லிம்களுக்கெதிரான சவால்களில் முன்னின்று செயற்படுவது இந்த ‘பொது
பலசேனா’ அமைப்பே.
கடமை தவறிய முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள்
இலங்கைத் தாயகத்தில் முஸ்லிம்களின்
எதிர்கால இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இத்தருணத்தில் சமூகப் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள்
தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பதானது முஸ்லிம்களுக்கெதிரான இத்தகைய
பேரினவாத அடக்குமுறைகளுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவே
நோக்கப்படுகின்றது.
தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் உரிமைகள்
என்றும், முஸ்லிம்களின் எதிர்காலம் என்றும் வீர வசனங்கள் பேசி வாக்குகளைப்
பெற்று அரசியல் அதிகாரத்தைப் பெறும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுக்கு
அமைச்சுப் பதவிகளும் கதிரைகளும் கிடைத்த மறுகணமே முஸ்லிம் சமூகத்தையும்,
முஸ்லிம் சமூகத்திற்கு தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்து
அரசியல் சுயலாபங்களுக்காக முழுச் சமூகத்தின் குரல்களையுமே அடக்குகின்ற
மாபாதகச் செயல்களையே காலாதி காலமாகக் கைக்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளை நகரில் பட்டப்பகல் வேளையில்
பிக்குகளின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில்
தகர்க்கப்படுகிறது. முழு முஸ்லிம் சமூகத்தினதும் மதச் சுதந்திரம்
பேரினவாதக் காடையர்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகிறது. மறுநாள்
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள்
தனித்துவமாகவும், செறிவாகவும் வாழும் பிரதேசத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் ‘தம்புள்ள
பள்ளிவாயலில் ஒரு தகரத்திற்கேனும் சிறியளவிலான சேதமும் இழைக்கப்படவில்லை’
என அறிக்கை வெளியிட்டதை இலங்கை முஸ்லிம் சமூகத்தினால் மறந்து விட முடியாது.
இன்னுமொரு முஸ்லிம் நியமன உறுப்பினர்
‘தினமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரியுங்கள் நன்மை
கிடைக்கும்’ என்கிறார். எங்கே செல்கின்றன எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள்
என்பதை இனியாவது எமது புலம்பெயர் உறவுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாற்றுமத அரசியல் தலைவர்களை
தர்காக்களுக்கும், பள்ளிவாயில்களுக்கும் அழைத்து வந்து அவர்கள் பெயரில்
பிரார்த்தனை செய்த நமது இறையச்சம்(?)மிக்க முஸ்லிம் சமூகத் தலைமைகள் அதே
பள்ளிவாயில்களும் தர்காக்களும் பேரினவாத சக்திகளால் உடைக்கப்படும்போது
மாயமாகியும், மௌனமாகியும் போகின்றன.
தேர்தல் மேடைகள் தோறும் ஜனாதிபதியை
அழைத்து வந்து ‘எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் எதுவித
சேதமும் இழைக்கப்பட மாட்டாது’ என்று வாக்குறுதியளிக்க வைத்து வாக்குகளைப்
பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதே ஜனாதிபதியின் கண்
முன்னாலேயே முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் அழித்தொழிக்கப்படும்போது
காணாமல் போய்விடுகின்றன.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின்
தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தையும், அரசுத் தலைமைகளையும்
பாதுகாப்பதற்காக மிகக் கடுமையாக உலகம் சுற்றி வந்து உழைக்கின்ற
உலமாக்களும், அரசியல் தலைமைகளும் நமது தாயகப் பூமியில் இஸ்லாமியச்
சின்னங்களும், முஸ்லிம்களின் இருப்புக்களும் அழித்தொழிக்கப்படும்போதும்
தமது பதவிகளையும், அரசு வழங்கும் சுகபோக வாழ்க்கைகளையும் தக்க வைத்துக்
கொள்வதற்காக மௌனித்துப் போய் விடுகின்றன.
எனவேதான் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற
இலங்கை முஸ்லிம் உறவுகளான நாம் நமது பாரிய எதிர்ப்பையும், வன்மையான
கண்டனத்தையும் இந்த பௌத்த பேரினவாத அடக்குமுறையாளர்களுக்கு எதிராகத்
தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாம் இன்னமும்
மௌனம் காத்து பொறுமை பூண்டிருப்போமாயின் எமது தாயக உறவுகளும் பர்மிய
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாரிய அவலங்களையே எதிர்காலத்தில் சந்திக்க
வேண்டியேற்படும் என்பதை அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துக்
கொள்ளவும் விரும்புகின்றோம்.
புலம்பெயர் முஸ்லிம் உறவுகளின் இந்த
விழிப்புணர்வு தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள No. 10, Dawning Street எனும்
முகவரியில் அமைந்திருக்கும் மாண்புமிகு பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களின்
வாசஸ்தலத்திற்கு முன்பாகவும், பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம்
முன்பாகவும் BBS எனப்படும் பொதுபலசேனாவின் வன்முறைகளையும்,
அடாவடித்தனங்களையும் பகிரங்கமாகக் கண்டித்து நமது எதிர்ப்பினை
வெளிப்படுத்தும் வகையில் புலம்பெயர் முஸ்லிம் உறவுகளையும், ஏனைய சிறுபான்மை
மக்களையும் ஒன்று திரட்டிய பாரிய நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதற்கான
ஏற்பாடுகளை இப்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இப்பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கும்
நடவடிக்கைக்கு முன்னோடியாக எதிர்வரும் 14.04.2014ம் திகதி, (நாளை)
திங்கட்கிழமை பிற்பகல் 05:00 மணிக்கு Crawley RH10 1SX எனும்
முகவரியிலுள்ள Heizalwick School இல் பிரித்தானியாவிலுள்ள பள்ளிவாசல்கள்
மற்றும் பொது நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், புத்திஜீவிகள்
போன்றோரின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறியும் பொருட்டு
திறந்த மக்கள் சந்திப்பொன்றையும் நாம் மிக அவசரமாக ஏற்பாடு
செய்திருக்கின்றோம்.
எனவே, எமதன்புக்குரிய பிரித்தானியா வாழ்
புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் மற்றும்
பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் அனைவரும்
இத்திறந்த மக்கள் சந்திப்பில் தவறாது கலந்து கொண்டு தங்களின்
கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியப்படுத்தி எமது நடவடிக்கைக்கு
ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்குமாறு மிக்க வினயமாக வேண்டிக் கொள்வதோடு,
இக்குறுகிய கால அழைப்பினை ஏற்று நேரில் சமூகமளிக்க முடியாதவர்கள் தயவு
செய்து கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை
ஏற்படுத்தி தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்து
உதவுமாறும், இத்திறந்த மக்கள் சந்திப்பினதும், ஒருமித்த எதிர்ப்பினை
வெளிப்படுத்தும் பாரிய கண்டன ஆர்ப்பாட்ட நடவடிக்கையினதும் அவசர அவசியத்தை
நன்குணர்ந்துள்ள நீங்கள் அனைவரும் பிரித்தானியாவிலும், சர்வதேச நாடுகளிலும்
வாழுகின்ற உங்களின் புலம்பெயர் உறவினர்கள், அன்பர்கள். நண்பர்கள்
அனைவருக்கும் இச்செய்தியினை அவசரமாகப் பகிர்ந்து கொண்டு அவர்களின்
கருத்துக்களைப் பெறுவதற்கு ஒத்துழைக்குமாறும் SLMDI UK அமைப்பின் சார்பில்
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் நமது தூய நோக்கங்களை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்து வெற்றியடையச் செய்வானாக!
SLMDI UK அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனான தொடர்புகளுக்கு:
Bro. Nazeer – 07950 261775, Bro. Jabeer
- 07446914555, Bro. Uwais – 07723 006846, Bro. Fawzik – 07872151294,
Bro. Shafi – 07577346123 Bro. Ilyas - 07722556464, Bro. Shifnas –
07429025242
SRI LANKA MUSLIM DIASPORA INITIATIVE UNITED KINGDOM
14,Loveletts,Gossops Green,Crawley,West Sussex RH11 8EG Uk
Mob:00447950261775,Office:00441293415145,Fax:00441293415145,
0 Comments