Subscribe Us

header ads

மாற்றங்களையும் சவால்களையும் நோக்கி கற்பிட்டி பிரதேசம் (பகுதி 2).......

முன்னுரை

சமகால கற்பிட்டி பிரதேசம் கற்பிட்டி வாழ் பல்லின சமூகம் இன்று பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகின்றன - எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தவறுகள் - குற்றங்கள் - குறைகள் என்ற ரீதியில் தலைமைத்துவங்களும் - சமூகத்தினரும் பரஸ்பரம் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

நெடுங்கால வரலாற்றுத் தடையங்களை தன்னகத்தே கொண்டு துறைமுக, வர்த்தக , பெருந்தோட்ட பொருளாதாரம், கலைகலாசார பாரம்பரியங்களை கொண்ட பல்லின சமூக அம்சங்களைக் கொண்ட கற்பிட்டியின் சமகால நிலை - எதிர்காலம் என்பவற்றை கட்டுப்படுத்தும் - நெறிப்படுத்தும் ஆளுமைகளை இழந்த தன்னிச்சையான சமூக செயற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.

சமூக இயக்கமானது இயல்பானதாக இல்லாமல் வெளியாரின் தலையீடுகளுடன் தனிநபர் நலன் சார்ந்த குறுகிய இலக்குகளை அடையக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கற்பிட்டியின் பொருளாதார வளங்கள், இயற்கை வளங்கள் என்பன முதலீடுகளாக்கப்பட்ட போதிலும் மக்களிடையே விரக்தியும் - நம்பிக்கையின்மையும் - எதிர்பார்ப்பின்மையும் கூடிய மனோபாவம் மேலோங்கி - அனைத்தையும் அலட்சியப்படுத்தலுடன் எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய பின்னணியில்தான் கற்பிட்டியின் பொருளாதார நடவடிக்கைகள், கல்வி, கலை , கலாசாரம், உற்பத்திகள், ஆன்மீகம் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் மக்கள் தமது செல்வாக்குகளை இழந்து- மக்களுடனான இடைத்தாக்கங்கள் இன்றி அந்நியப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் அவற்றில் தமக்கான உரிமைகளைக்கூட அறியாதவர்களாக மக்களின் செயற்பாடுகள் அமைகின்றன.

இந்நிலையில் கற்பிட்டி மக்களுக்கான அரசியலட துலைமைத்துவங்கள், புத்தி ஜீவிகளின், சமூக ஆர்வாலர்களின், உள்ளூர் பொது நிறுவன தலைமைத்துவங்கள், ஆன்மீக நிலையங்கள் போன்ற சகல உள்ளூர் அமைப்புக்களினதும் செயற்பாடுகளை மீள்பரிசீலினை செய்து - மீள்கட்டமைக்க வேண்டிய தேவை சகலராலும் உணரப்படுகின்றன. அவற்றில் கற்பிட்டியின் சமகால நிலையில் கல்வித்துறையும் இவற்றுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. (இவற்றை உணர்ந்த தரப்பினரால் அவ்வப்போது முன்வைக்கப்படும் வரவேற்கக்கூடிய கருத்துக்கள் - ஆலேசனைகள் விரிவானாதாக இல்லாமல் ஓரிரு வரிகளில் அமைகின்றமையை பொதுவாக அவதானிக் முடிகின்றது. அவை கற்பிட்டியின் சமகால நிலைமைக்கு போதுமானவையல்ல என்பதும் குறிப்பிடதக்கது).

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகும். இதனை உணர்ந்த கற்பிட்டியின் கடந்தகால சமூகத்தலைமைத்துவங்கள் அதற்கான காத்திரமான பணிகளை தீர்க்கதரிசனத்துடன் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்தனர். அவ்வரிசையில் சைமன் காசிச்செட்டி அவர்களின் சிவில், நீதித்துறை, இலக்கிய, எத்துறை சார்ந்த பணிகளையும், எந்திரவியலட பொறியியயலாரான அக்பர் அவர்களின் சட்டத்துறைப் பிரவேசத்தினுாடாக உயர் நீதிமன்ற நீதியரசரானதுடன், இவரின் கல்வித்துறை சாதனைகளின் நினைவாக பேராதனையில் அக்பர் விடுதி கட்டடம் இன்றுவரை உள்ளமையும், கல்விக்காக இடதுசாரி அரசியல் ஊடாக மிகச்சிறந்த பன்முகத்தன்மையுடன் கூடிய தலைமைத்துவத்தை வளங்கி கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் எனப்பல்துறை பணிகளின் மூலம் கற்பிட்டியை கட்டியெலுப்பியர்வரகளான மதார் மரிக்கார், காதர் இப்றாகிம் மரிக்கார் போன்றவர்களையும்,  கல்விக்காக காணியை வழங்கி அல்-அக் ஷாவின் இருப்பை உறுதிப்படுத்திய தம்பி நெய்னா மரிக்கார் அவர்களின் அர்ப்பனம் - அவரின் இலக்கிய பணிகள் என்பவையும், கிரகிரி மாஸ்டர் அவர்களின் கல்வி முயற்சிகள் இப்பகுதியில் ஏற்படுத்திய கல்வி நிலை மாற்றங்களையும் அக்காலத்தில் பணியாற்றிய DRO அதிகாரிகளின் கல்வித்துறை சார்ந்த பணிகளுக்கு வழங்கிய முக்கியத்துவங்கள் குறிப்பாக சதாசிவம் என்பவரது பணிகளையும்  கிரிஸ்தவ சமய, கல்வி, கலாசார பண்பாட்டு விழுமியஙடகளுகடகு புத்துயிரளித்து கற்பிட்டியின் வளங்களீனுாடாக) உதவிய மார்க்முதலாளி, சிமியோன், பேபிசிங்கம் முதலானோரின் பணிகளையும் குறிப்பிடலாம்.

இத்தகைய உயர்நிலையிலான பனியாற்றி கல்விக்கு உரமூட்டிய பெருந்தகைகளின் வழிகாட்டல்களைக் கொண்டதான கற்பிட்டியின் கல்வி அடைவுகள் - சமகால கற்பிட்டி கல்விபுலங்களால் அடையப்பெற்றுள்ளனவா என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான விடைகளை தேடும் போதே நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் அடையாளம் காண முடியும். அதற்கான ஒரு திறந்த அழைப்பினை விடுக்கின்றோம்.

நாம் மேறகொள்ளப்போவது சமூகப்பிரச்சினையை ஆராய்தலாகும். இதன்போது கருத்து வேறபாடுகள், தனிநபர் சார்ந்த பலம்-பலவீனங்கள் பற்றி விமர்சனங்கள் முன்வரலாம். பலரின் முகச்சழிப்பையும் எதிர்கொள்ள வேண்டியேற்படலாம். இவற்றை தவிர்த்து சமூகத்தின் பிரச்சினைகளை மூடிமறைத்து ஆராய்வதால் தீர்வுக்கான இலக்குகளை அடையாளம் காண முடியாது. எனவே சமூக நலன்களுக்காக நாம் திறந்த மனதுடன் பேசுவோம். தவறுகளை அடையாளம் காண்போம் திருத்தங்களை தேடுவோம். கற்பிட்டியின் கல்வி மேம்பாட்டை முன்னிறுத்தி அதனுாடாக புதியதொரு முகவரியை பெறுவோம்.

”ஆயிரம் தீயவர்கள் புரியும் தீமைகளை விட ஒரு கற்றவரின் மௌனத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாகும்”

-------------------------------------------------------------------------------------------------------------

சென்ற வாரங்களின் தொடர்ச்சி பகுதி -2

முன்னைய பதிவில் கற்பிட்டி சமூகத்தின் பின்னடைவுகள் - அதன் காரணமாக ஏற்பட்டுள்ள சமூகத்தின் உள்ளார்ந்த தாக்கங்கள் - அதற்கான பிரதிபலிப்புக்ள் என்ற வகையில் ஒரு மீள்பார்வையை சுய மதிப்பீடுகளை மேற்கொண்டோம்.

இவ்வாறான பலவீனமான சமூகப் போக்குகளினால், பாடசாலைக்கு சமூகத்திலிருந்து கிடைக்கக்கூடிய பங்களிப்புகள் மிகவும் கீழ்மட்ட நிலையிலேயே நிலவுகின்றன. புலைமைசார்ந்த நிறுவனமொன்றுக்கான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும்  வழங்கக்கூடிய தகைமையுடையோரை சமூகத்திலிருந்து இனங்காணேவோ தெரிவு செய்யவோ முடியாமை பாடசாலையின் பின்னடைவை மேம்படுத்துகிறது (இத்தகையோரை உருவாக்கியிருக்க வேண்டிய கட்டுப்பாடு பாடசாலைக்குறியதாகும்.

குறிப்பா SDS/SDC என்ற அமைப்பானது தேசியக் கல்விக் கொள்கைகளுக்கூடாகவும் அரச வளங்களினுாடாகவும் சமூகம் எதிர்பார்க்கும் அபிலாசைகளையும், தேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஒர் கட்டமைப்பாகும். பரந்த சமூக நோக்கும், தீர்க்க தரிசன சிந்தனையும் உள்ளவர்கள் இக்கட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதை உறுதிபடுத்திக் கொள்வதும், அதனை உரிய வகையில் இயங்கு நிலையில் வைத்திருப்பதும் சமூகத்தின் பொறுப்பாகும்.

சமூகமும்- பாடசாலையும் பரஸ்பரம் ஒன்றையொன்று குறைகாண்பதிலும் விமர்சிப்பதிலும் மட்டுமே காலத்தை கடத்துகின்ற நிலையானது, மாற்றமடைவதற்கான முன்னெடுப்புகளின்றி உள்ளமையை இரு சாராரும் உணர வேண்டும். குறை காண்பதற்கும் விமர்சிப்பதற்கும் பாடசாலைக்குள்ள உரிமை கேள்விக்குட்படுத்த வேண்டியதாகும். சமூகத்தை உருவாக்கவும் வழிப்படுத்தவும். கட்டுப்பாடுகளை கொண்ட பாடசாலை கட்டமைப்பானது சமூகத்தை குறைகாண்பது பொறுப்பற்ற செயலாகும்.

இத்தகைய பின்னணிகளின் அடிப்படையில் கற்பிட்டியின் சமகால கல்வி, பாடசாலை பிரச்சினைகளை அணுகுவது மிகப்பொருத்தமாகும். ஏனெனில் பிரச்சினைகளுக்கான மூல வேர்களை - அடிப்படைகளை ஆராய்வதே அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை திட்டமிடுவதற்கான ஆதாரங்களை முன்வைக்கும்.

பாடசாலையின் ஆரம்பம்,

கற்பிட்டிப் பிரதேசத்திற்கென பாடசாலையொன்றின்  தேவையை உணர்ந்து செயற்பட் கற்பிட்டியின் பெருந்தலைவர்களை நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்து இப்பகுதியை தொடங்குவது தார்மீகப் பொறுப்பாகும்.

ஏனெனில் இழந்துவிட்ட கற்பிட்டிக்கான எதிர்காலத்தை கல்வியின் மூலமே அடைந்து கொள் முடியும் என்ற தீர்க்கதரிசனமான பார்வையை கொண்டிருந்தமை அக்கால சமூகத் தலைவர்களின் உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகும். குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியின் போது இழந்துவிட்ட கல்வியை அவர்கிளன் காலத்தீலேயே திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோரை தீர்கதரிசிகளாகவே நோக்க வேண்டும். இப்பிரதேசத்தின் அபிவிருத்தி சமூகவியல் என்பவற்றிலான மறுமலர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்தென்பதை உணர்ந்தவர்களின் பெரு முயற்சியால் இப்பாடசாலையின் தோற்றம் நிகழ்ந்துள்ளது.

அதற்காக அல்-அக்ஸா பாடசாலை ஆங்கிலம்-தமிழ் ஆகிய இருமொழப் பாடசலையாக உருவாக்கப்பட்டமை விஷேடமாகக் குறிப்பிட வேண்டிய விடயமாகும். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் ஆரம்பமான இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் 1970 வரையில் சிறப்புடன் விளங்கியதெனலாம். சமூக நோக்கும், அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் கொண்ட பாடசாலைத் தலைமைத்துவங்கள் , ஆசிரிய  ஆளணியினர் பிரதேச மக்களின் நிலைமைகளை மாற்றியமைப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது. பெற்றார்களை விழிப்புணர்வூட்யமை, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் நுாறு வீத அக்கறையை கொண்டிருந்தமை, நாட்டின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகை தந்த அதிபர்கள் ஆசிரியர்களின் பணிகள் வளம்பெற்ற மாணவசமுதாயம் - மக்கட் பிரவினர் கற்பிட்டியின் தோற்றம் பெற்றனர். இத்தன்மையினை அக்கால கட்டங்களில்  வெளியேறிய மாணவர்களில் (வெளியீடுகளில்) காண முடிகின்றது.

எவ்வாறாயினும் 1970களில் முனைப்படைந்த தேசியப் பிரச்சினைகளின் விளைவாக இப்பிரதேசத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள் தமது மட்டும் நிறைவேற்றத் தலைப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் நிலவிய சமூக அக்கறை மறைந்து விட தமது புலைமையை மட்டும் தக்க வைத்துக்கொண்டதுடன் பிரதேசவாத சிந்தனைகளுக்குள் நின்று செயற்பட விளைந்துள்ளமையை பாடசாலையினதும், கற்பிட்டிப் பிரதேசத்தின் வாரலாறுகளிலும் காணலாம். 1970களுக்கு முன்னர் பாடசாலையிலிருந்து வெளியானோரிக் சிந்தனைகள், ஆற்றல்கள், புலைமைகள் என்பன உயர்வதனதாக நிலவின. அதன் காரணமாகவே இக்கால கட்டங்களை அடுத்து தேற்றம்பெற்ற தலைமைத்துவங்கள் உயர் ஆலுமைக் கூறுகளுடன் செயற்பட்டு உள்ளனர்.

அத்தகைய தலைமைத்துவங்களுக்குப் பின்பு இன்று வரையில் சிறப்பான தலைமைத்துவங்களை கற்பிட்டிப் பிரதேசத்தில் அடையாளப்படுத்த முடியாதுள்ளது.

இத்தகைய ஓர் வரலாற்றுப்பின்னணியில் 1970களைத் தொடர்நது வந்த காலங்களில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே (பாடசாலையின் உள்ளுர் வெளியீடுகள்) ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். கற்பிடடியின் எதிர்காலமும், சமூகத்தின் இருப்பும் இவர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவர்களே சமூகத்தின் தேவையுணர்ந்து வெளியீடுகளின் தரத்தை நிர்ணயித்திிருக்க வேண்டும். . இத்தகைய உயர்ந்த பணிகளை நிறைவேற்றுவதில் பின்பற்றப்பட்ட சமூக நோக்கமற்ற அசமந்தப் போக்குகளே சமகால பாடசாலையைம் - சமூகத்தையும் தோற்றுவித்த வண்ணடுள்ளன.

பாடசாலை என்பது சமூகத்தின கண்ணாடியாகும் சமூகத்தின் இளம் அங்கத்தவர்களே பாடசாலைக்கு வருகை தருகின்றனர். எனவே சமூகத்தில் நிலவும் அனைத்து பலங்களும் - பலவீனங்களும் பாடசாலையில் பிரதிபலிக்கின்றன. இதற்கான பொறுப்புக் கூறலை பாடசாலை மட்டும் மேற்கொளவதிற்கில்லை. சமூகத்தின் நெறிப்படுத்தல்களும, சமய ஸ்தாபனங்களின் நெறிப்படுத்தல்களும், தொடரபாடல் துறையின் வழிப்படுத்தல்களும் மாணவச் சமூகத்திற்கு குறைவிலாது கிடைக்கின்றன. அவற்றுக்கும் இப்பொறுப்புக் கூறும் கடமையுண்டு. அத்துடன் பாடசாலைத் தலைமைத்துவம் கூட்டுப்பொறுப்பில் அமைந்ததாகும். எனவே தனிநபர் மீதான பொறுப்புச் சாட்டுதலும் முறையற்றதாகும் என்பதும் குறிப்பிடதக்கது.

எவ்வாறாயினும் ஒரு சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பாடசாலைகடகுறியதாகும். இப்பொறுப்புக் கூறலுக்கு சமகால தலைமைத்துங்களுடன் கடந்த கால தலைமைத்துவங்களுக்கும் சமவகிபாகமுள்ளது. கற்பிட்டி சமூகத்திற்குள்ள ஒரேயொரு நம்பிக்கை இப்பாடசாலை மட்டுமே. எனவே இப்பாடசாலைக்கான சமூகப் பொறுப்பில் சகலரும் சமபங்குடன் வகைக்கூறலுக்கு உட்பட்டுள்ளனர்.

இத்தகைய பின்னணியில் சமகால பாடசாலை தோற்றப்பாடுகளுக்குறிய அம்சங்களை தனித்தனியாக ஆராய்வது பிரச்சினையை விளங்கிக் கொள்வதனை இலகுபடுத்தும்.

     01. தலைமைத்துவங்களின் வகிபாகம்

பாடசாலைக்கட்டமைப்பில் உயர்வகிபாகம் அதிபரிக்குறியதாகும். பாடசாலைக்குறிய பௌதீக, ஆளணி வளங்களினுாடாக உச்சப்பயனை அடைவதற்கான பணிகளை ஒழுங்கமைத்தலும், முகாமைத்துவம் செய்வதும் அதிபரின் பணியெனலாம். இப்பணிகளை மேற்கொண்டவர்கள் கீழ்வரும் விடயங்களில் தம்மை ஆளுமைப்படுத்தியிருக்க வேண்டிய தேவையிருந்தது - இருந்து வருகின்றது.

* தேசியக் கல்விக்கூடாக கற்பிட்டி வாழ் சமூகத்துக்க பொருத்தமான வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

* பாடசாலையையும் - சமூகத்தையும் ஒன்றிணைபதற்கான தொடர்பாடல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்.

* கல்வி அபிவிருத்தியில் பாடசாலையின் வகிபாகத்துக்கான நம்பிக்கையை சமூக மட்டத்தில் கட்டியெழுப்புதல். நிலைபெறச்செய்தல்.

* படாசலையின் சமகால நிலைமைகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துறையாடல்களை மேற்கொண்டு தீர்மாணங்களை நிறைவேற்றுதல்.

* உள்ளுர் பொது அமைப்புக்கள் - மத நிறுவனங்கள் என்பவற்றறுடான இடைத்தொடர்புகளை மேம்படுத்தல்.

* ஆசிரியர் - மாணவர் தொடர்புகளை உயர்நிலையில் பேணுதல்.
* பாடசாலையின் இணைப்பாடச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.

* பாடசாலையின் நலன்விரும்பிகள் , புத்திஜீவிகள் மதலானோரின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதழ்களையும் பெறுவதற்கான பொறிமுறையொன்றைத் தோற்றுவித்தல்.

* ஆளணியினரில் தனிநபர் விஷேட திறன்களை இனங்காணலும் - பாடசாலையின் அபிவிருத்திக்கு அதனை முதன்மைப்படுத்தலும்.

* OBA,SDC,SDS என்பவற்றை பலப்படுத்தலும் - அவற்றின் தொடர்ச்சியான இயக்கத்தை உறுதிப்படுத்தலும்.

* பாடசாலையிலுள்ள வளங்களை முழுமையாகப் பிரயோகிப்பதற்கான வேளைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

*  ஆசிரியர் - மாணவர் நலனோன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

*  நல்லாட்சிக்கான இயல்புகளை கொண்ட முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

* விவேகத்துடன் கூடிய உபாயங்களை கையாள்வதற்காள தகைமைகளை வெளிப்படுத்தல் மேம்படுத்தல்.

* ஆளணியினரின் பலம் - பலவீனங்களை உணரந்து விளைவுகளைத் தோற்றுவித்தல்.

இத்தகைய நடவடிக்ககைளில் தம்மை வலுப்படுத்திக் கொள்வது பாடசாலைத் தலைமைத்துவத்திற்கான இன்றைய அவசியத் தேவையாகியுள்ளது. இதன்போதே சமூகத்தின் தேவையை பூர்திசெய்யக்கூடிய உன்னதமான பாடசாலையை உருவாக்க முடியும். அதற்கான பணிகளை மேற்கொள்ள பாடசாலையின் தலைமைத்துவம் ஆக்கபூர்வமான முன்னெடுப்பபுகளை மேற்கொள்ளாவிடின் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாமலேயே போகலாம்.

     02. அரசியல்

கற்பிட்டிப் பிரதேசத்தின் அரசியலானது தங்கிவாழும் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. மேல்மட் அரசியல் வாதிகளின் அபிமானத்தையும், செல்வாக்கையுமு் பெற்றவர்களும் உள்ளுர் அரசியல்வாதிகளாகி சமூகத்தின் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துகின்றனர். மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று தலைமைத்துவத்திற்கு வந்தோரை அடையாளப்படுத்துவது மிகக்கடினமாகும். இத்தகையோர் மேல்மட்ட அரசியல் வாதிகளுடைய வாக்குவங்கியின் காவலர்களாகவே தொழிற்படுகின்றனர்.

இவர்கள் சமூகத்திக் பிரிச்சனையை நோக்கும் போது தமது கட்சி, தலைவர், சுயஇருப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே அணுகுவர். இப்பின்னணியில் இவர்கள் இப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கான முன்னெடுப்புகளில் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதில் பின்னடைவுகளையே வெளி்ப்படுத்துகின்றனர். இதன் காரணமாவே சகல முன்னெடுப்புக்களும் இடைநடுவில் நின்று விடுகின்றன. இதற்கான காரணங்களை நோக்குகையில் பின்வருமாறு அமைகின்றன.

* தமது உயர் அரசியல் தலைமைகிளன் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் கரிசனை.

*  சமூகத்தின் பிரச்சினைகள் , தேவைகள் தொடர்பான தெளிவான பார்வையின்மை.

*  பொது நோக்கத்திற்காக கட்சி வேறுபாடுகளுக்கப்பல் இணைந்து செயற்படாமை.

* வாக்குகளுக்கான பிரதியீடாக மட்டுமே சமூகப்பணிகளை மேற்கொள்ளுதல்.

* சமூகத் தேவைகளுக்காக பேரம் பேசுவதிலான தயக்கம் - அனவாசியமான விட்டுக்கொடுப்புகள்.

*  தலைமைத்துவத்திற்குரிய அம்சங்களை கொண்டிராமை .

* தாம் தங்கியுள்ள உயர் அரசியல்வாதிகளின் பலவீனங்களை அல்லது பின்னடைவுகளை சமூகத்திற்கு கடத்தி விடுதல்.

* உள்ளுர் புத்தி ஜீவிகளுடனான ஆலோசனைகளை மேற்கொள்ளாமை.

* மக்களை ஒன்றினைப்பதற்கான வலுவின்மை.

* சமூகத்திற்கான - கற்பிட்டிக்கான நிலையான கொள்கையொன்றை உருவாக்கி அதற்கிசைவான முன்னெடுப்புக்களில் ஈடுபடாமை.

*  உள்ளுர் பொது அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய நிறுவனங்களின் பணிகளை சமூக மேம்பாட்டுக்காக ஒன்றினைக்கும் வலுவின்மை.

* மாற்றுக் கருத்துடையோருக்கூடானான தொடர்புகளை பேணமுடியாமை - அவர்களின் நிலைப்பாடுகளை மாற்றியமைக்கும் வலுவின்மை.

* நல்லாட்சிக்கான இயல்புகளை வெளிப்படுத்தி செயற்படுவதிலான தயக்கம்.

இத்தகைய காரணிகள் உள்ளுர் அரசியல்வாதிகளின் உள்ளுர் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதால் சமூகம் வேண்டி நிற்கும் தலைமைத்துவங்களை வழங்கமுடியாதுள்ளனர். அத்துடன் சமூகத்தின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதிலும் அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதிலும். தமது நடவடிக்கைகளை ஆக்க பூர்வமானதாக தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி சமூகத்தின் பார்வையை தம்பக்கம் ஈர்ப்பதிலும் பின்னடைவுகளையே வெளிப்படுத்திள்ளனர்.

இத்தகைய பலவீனமான அரசியல் முன்னெடுப்புகளை கொண்ட அரசியல் தலைமைத்துவங்களிடமிருந்து பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கான முழுமையான பங்களிப்புகளை பெற்றுக்கொள்ளவது இயலாத அம்சமாகும். பிரதேசக் கல்வி தொடர்பான சிந்தனைகளை முன்வைக்கவோ அதற்காள காரணிகளை முழுமையாக ஒன்றினணக்கவோ இத்தலைமைத்துவங்களால் இதுவரையில் முடியவில்லை. ஏனெனில் பிரதேச, இன, மொழி ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்குற்ற அரசியல், அதிகார, வாக்கு பலம் இப்பிரதேச அரசியல் தலைமைத்துவங்களிடம் காணமுடியாதுள்ளது.

எனவே பிரதேச அரசியல் தலைமைத்துவங்களால் பாடசாலையின் கல்வி அடைவுகள் சீரமைக்கப்படுவதற்காள வாய்ப்புக்கள் இன்றியே உள்ளன. அதேவேளை பாடசாலையின் வேளைத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு பக்கபலமாகவே இவர்களின் பணிகள் அமைய வேண்டும் என்பதை கவனத்திறகொள்ள வேண்டும். மாறாக பாடசாலையின் நாளாந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பணிகளை

நன்றி: Kalpitiya 1st
Kalpitiya 1st,  உங்களது ஆக்கங்களை  நாம் என்றும் வரவேற்கிறோம்.
KV. News Panel.
   


   

Post a Comment

0 Comments