மாயமான மலேசிய விமானத்தை கடலடியே தேடும்
முயற்சி தற்போது நடைபெறுகிறது. ஆனால், இதற்காக இவர்கள் உபயோகிக்கும் ரோபோ
நீர்மூழ்கி (robotic submarine) செல்லக்கூடிய அதிகபட்ச ஆழத்தைவிட,
அப்பகுதியில் கடல் ஆழமாக உள்ளது!
நேற்று (திங்கட்கிழமை) கடலடியே அனுப்பி
வைக்கப்பட்ட ரோபோ நீர்மூழ்கி, பாதி வழியிலேயே திரும்பி வந்துவிட்டது. இந்த
நீர்மூழ்கி கடல் அடியே 16 மணி நேரத்துக்கு தேடுதல் நடத்தும் என கூறப்பட்டே
நேற்று அனுப்பப்பட்டது. ஆனால், 6 மணி நேரத்தில் ரோபோ நீர்மூழ்கி மேலே
வந்துவிட்டது.
தற்போது கடலடி தேடுதல் நடவடிக்கைக்காக
Bluefin 21 என்ற ரோபோ நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது (மேலே போட்டோ
பார்க்கவும்). அதன் மேக்சிமம் லிமிட், 15,000 அடி (4,500 மீட்டர்) மட்டுமே!
மாயமாக மறைந்த மலேசிய விமானம், சீ-பெட்
எனப்படும் கடலடி தரையில் இருக்கலாம் என்பதே, தற்போதைய ஊகம். சீ-பெட், கடல்
மட்டத்தில் இருந்து 15,000 அடியைவிட அதிகமாக உள்ளதால், கீழ்நோக்கி சென்ற
ரோபோ நீர்மூழ்கி, தனது அதிகபட்ச ஆழ அளவை அடைந்ததும், built-in safety
feature காரணமாக, தாமாகவே ஷட்-ஆஃப் ஆகி, மேலே வந்து சேர்ந்துவிட்டது.
இந்தப் பகுதியில் கடலில் ஆழம் 15,000
அடியைவிட அதிகம் என்பது முன்கூட்டியே தெரிந்த விஷயம்தான். அதற்காக வேறு சில
மாடல் ரோபோ நீர்மூழ்கிகளையும் பரிசீலனையில் வைத்திருந்தார்கள்.
இருப்பினும் வேறு எந்த ரோபோ
நீர்மூழ்கியும், இந்த கடல் கண்டிஷனில், இதைவிட அதிக ஆழத்துக்கு செல்லும்
வகையில் இருக்கவில்லை. (மற்றைய பகுதிகளைவிட இந்த கடல் பகுதியில் தற்போது
கொந்தளிப்பு கண்டிஷன் அதிகம்) எனவேதான், Bluefin 21-ஐ உபயோகிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று அனுப்பப்பட்ட Bluefin 21, கடலடியே
இருந்த 6 மணி நேரத்தில் சேகரித்து வந்த தரவுகள் தற்போது ஆராயப்படுகின்றன.
இன்று, கடலின் கொந்தளிப்பு நிலையை பார்த்து, மீண்டும் கடலடியே Bluefin
21-ஐ அனுப்புவதா என முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments