Subscribe Us

header ads

நாச்சியாதீவு மொஹமட் பர்வீனிடமிருந்து அதிமேகு ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்...

இலங்கை ஜனநாயக குடியரசின் அதி மேதகு நிறைவேற்று அதிகாரம்

கொண்ட கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு .....?

இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் நாங்கள் மிகவும் சந்தோசப்பட்டோம் ஏனெனில் தொடர் யுத்தத்தினால் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று மூன்று சமூகமும் உயிர் பொருள் என்று இழந்து சொல்லெனா துயரத்தை அனுபவித்தனர்

உங்கள் ஆட்சியிலான யுத்த வெற்றியானது உங்களை இரண்டாம் துட்டகைமுனுவாகவே சிங்கள மக்களைப்போலவே பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் பார்த்தனர், அதனை நிறுவும் முகமாக நீங்களும் மேடைகளில் தமிழில் உரை நிகழ்த்தி எங்கள் மனங்களில் இடம்பிடித்தீர்கள் உங்கள் மேடைப்பேச்சில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் உங்கள் சகோதரர்களாக விளித்தீர்கள் நாங்கள் சந்தோசப்பட்டோம்.

எமது சந்ததிகள் நிம்மதியான யுத்தமற்ற சமாதானமான ஒரு அழகிய இலங்கையை பெற்றுவிட்டதாக பெருமிதமடைந்தோம் உங்கள் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது நீங்கள் சமதர்ம கொள்கையில் இருப்பதாக நம்பினோம் இதனை நிரூபிக்க உங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் யுத்த குற்றட்சாட்டினை

ஐ நா வின் முன் கொண்டு வந்தபோது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உங்களுக்கு ஆதரவாக ஜெனீவாக்கு சென்றது , அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா அஸ்வர் , பவுசி ஆகியோர் அரபு நாடுகளின் வாக்குகளை உங்களுக்கு சார்பாக பெற்றுத்தந்தனர் ஜெனீவா பிரேரணைக்கு முற்பட்ட காலங்களில் அமைச்சர் ரவுப் ஹகீம் முஸ்லிம் நாடுகளுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு உங்களுக்கான ஆதாரவை திரட்டினார் இதெல்லாம் காலாகாலமாக இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆளும் அரசுக்கு பாதுகாப்பாகவும் விசுவாசமாகவும் இருந்துள்ளார்கள் என்பதை சுட்டி நிற்கின்றன.

இன்றும் மேற்சொன்ன அமைச்சர்கள் ஆளும் உங்கள் குடைக்குள் தான் வாசம் செய்கிறார்கள் அவர்கள் எங்களுக்காக எமது மத உரிமைகளுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாத பாமரர்களாகவே இன்னும் நாம் இருக்கிறோம் என்பதை மிகவும் மனவருத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

அதி மேதகு ஜனாதிபதி அவர்களே!


இந்த நாட்டின் ஜனாதிபதியான உங்களையும் மீறிய ஒரு சக்தி உள்ளதா? அல்லது சினிமாப்படங்களுக்கான ஒத்திகைகளை நாம் பிழையாக புரிந்து கொண்டோமா என்கின்ற பலத்த சந்தேகம் அண்மைக்கால நிகழ்வுகளை பார்க்கும் போது எண்ணத்தோன்றுகிறது

ஆம் ஜனாதிபதி அவர்களே நீங்கள் நல்லவர் அதனால் தான் பெரும்பான்மை மக்கள் உங்களை விரும்புகிறார்கள் மட்டுமல்ல "நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் இங்கே பவுத்தம், இஸ்லாம் ,இந்து , பெர்கர் என்று எல்லா மதத்தினருக்கும் அவரர் மதத்தை பின்பற்றும் பூரண சுதந்திரம் உண்டு" என்று அடிக்கடி கூறி வருகிறீர்கள் அப்படி என்றால் ?????

இப்போது எம்மை மலினப்படுத்தி சிறுபான்மையினரை கேவலப்படுத்தும்

1- பொது பல சேனா

2-சிங்கள ராவய

3- சிகல உரிமைய

இவைகள் முஸ்லிம்களாகிய எங்களது மத உரிமையை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்குறார்கள், எங்களது வாழ்வாதார அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளார்கள், எங்களை வந்தேறு குடிகளாகவும் பவுத்த மதத்தின் எதிரிகளாகவும் அப்பாவி சிங்கள மக்களுக்கு காட்ட முனைகிறார்கள் பவுத்தம் கூறும் எந்த விதமான அகிம்சை, கருணை , மதித்தல், விட்டுக்கொடுத்தல் இப்படியான எந்த விதமான நற்பண்புகளும் இவர்களிடம் மருந்துக்கூட இல்லை சண்டியர்களாக மிக நீண்ட நாட்கள் இந்த உலகை ஆழ வந்தவர்களாக பிறக்கும்போதே இந்த மண்ணின் உரிமைப்பத்திரத்தை கையேடு கொண்டு வந்தவர்களாக இவர்கள் போடும் நாடகம் யாருடைய தயாரிப்பு ?

நாங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிரிவினையை ஆதரிக்க வில்லை மட்டுமல்ல அடுத்த மதங்களின் எதிரிகளும் அல்ல நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இந்த நாட்டின் சகல நலவு நஷ்டங்களிலும் நாங்களும் பங்குதாரிகள் எங்களை ஜாதிகளாக பிரித்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை "பொது பலசேனா' என்ற தீவிர வாத அமைப்புக்கு யார் கொடுத்தது?

நாங்கள் சண்டை போட்டு அல்லது யுத்தம் செய்து இந்த நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை ஆனால் அது இடம்பெற்று விடுமோ என்று நான் பயப்படுகிறேன் -பொது பலசேன போன்ற தீவிரவாத அமைப்பின் மிகக் கேவலமான பேச்சுக்களை கேட்டுக்கொண்டும் இன்னும் நாம் அமைதியாக இருப்பது எங்கள் பாரள மன்ற உறுப்பினர்களின் மீதுள்ள நம்பிக்கையினால் என்று மட்டும் நீங்கள் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம் உங்கள் பதில் ஒன்றுக்காகத்தான் நாம் அமைதியாக இருக்கின்றோம் நாம் இந்நாட்டின் குடிமக்கள் தான் என்பத்தை இந்த நாட்டின் முதற் பிரஜை ஆகிய நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் அல்லது எமக்கான நாடு எது என்பதை அடையாளப்படுத்த வேண்டும் அங்காவது இந்த பலசெனாக்களின் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ,

"பொது பலசேனா அமைப்பைப் போல முஸ்லிம்களாகிய நாம் பல நூறு வருசங்கள் வாழும் நோக்கில் இங்கு வாழவில்லை எமது இந்த வாழ்க்கையானது மறு உலகை நோக்கிய மிகத்தெளிவான பயணமாகும் இந்த உலகை நேசிக்கின்ற மனிதர்களுக்கு தான் நீண்ட ஆயுள் மீதான நப்பாசை இருக்கும் முஸ்லிம்களாகிய எமது

இலக்கும் நோக்கமும் விருப்பமும் அடுத்த உலகத்தின் வெற்றியாகும் நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள் பொது பல சேனா அமைப்பை பூண்டோடு அழித்து விட்டு உங்கள் முன் நிற்கின்றோம் அல்லது அவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள்

முஸ்லிம்களாகிய நாம் உயிரை விடவும் எம் உறவுகளை விடவும் எங்கள் மதமான இஸ்லாத்தை நேசிக்கின்றோம் அதன் போதனைப் பிரகாரம் அன்போடு அமைதியாக வாழ விருப்புகிறோம் உங்களோடு ஒற்றுமையாக அடுத்த மதத்தவர்களை மதித்து வாழவே நாம் பணிக்கப்பட்டுள்ளோம் இருந்தும் எங்களைக் கிள்ளிப்பார்த்து சுகம் காண முயல்கிறது பொது பல சேனா -நீங்கள் பவுத்ர் என்றாலும் இந்த நாட்டின் சர்வ அதிகாரமும் கொண்ட இந்த நாட்டின் ஜனாதிபதி நீங்கள் தான் இந்த நாட்டின் சகல இன மத மக்களினதும் ஜனாதிபதி நீங்கள் தான் சகல கட்சியினருக்கும் மான பொதுவான ஜனாதிபதி எங்கள் குறைகளை ஏக்கங்களை உங்களிடம் தான் கூற முடியும் ஒரு அமைதியான இன்னும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்பும் எமது இளைஞர்களை உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலை கன கட்சிதமாக செய்து வரும் பொது பல சேனா அமைப்பை தயவு செய்து

கட்டுப்படுத்துங்கள் எங்களுக்கு உயிரை விடுவது மயிரை பிடுங்கி எறிவதைப்போல -பொது பல செனாவினால் ஒரு நாடு இன்னொரு யுத்தத்தினுள் நுழைந்தது எனும் வரலாற்றுப் பிழை உங்கள் ஆட்சியில் நிகழாதிருக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன் மட்டுமல்ல எம்மை ஏசித்திரியும் ஞான சார தேராவுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக.

உங்கள் முடிவுக்காக அல்லது பதிலுக்காக என்போன்ற இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் உங்களை நம்பி காத்திருக்கின்றோம் ..

நன்றி

நட்புடன்

நாச்சியாதீவு பர்வீன்

armfarveen@gmail.com

நன்றி: மடவள நியூஸ்

Post a Comment

0 Comments