Subscribe Us

header ads

நாடு திரும்பும் இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு ஏற்பாடுகள்.

2014ஆம் ஆண்டு பங்களாதேஸில் இடம்பெற்ற 20க்கு20 உலக கிண்ணப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி நாளை (08) மாலை 4 மணி அளவில் இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை அணியை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட்ஏற்பாடுகளை செய்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திறந்த ஜீப் வண்டியில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்

இதன்போது பொதுமக்கள் தமது வாழ்த்துக்களை அவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்கள் நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments