சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக இந்த கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன.
அவை அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கணனி கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது.
இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது.
ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கணனிகள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க தொலைபேசி அளவுக்கு மாறிவிட்டன.
இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
தற்போது 1500 அமெரிக்க டொலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை
அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு
வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.
0 Comments