Subscribe Us

header ads

மன்மத லீலையில் போலிப் பொலிஸ்: மாத்தறை கடற்கரையில் காதலர்களை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம்

காத­லர்­க­ளுக்கு கடற்­கரை என்­பது மிகவும் பிடித்­த­மான இடம் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இருக்க முடி­ யாது. காத­லர்கள் சுதந்­தி­ர­மாக மனது விட்டு உரை­யாட கடற்­க­ரையை பயன்­ப­டுத்­திக் கொள்கின்றனர்.

இலங்­கையின் பல கடற்­க­ரை­க­ளிலும் நாம் இதனை அவ­தா­னிக்க முடி­கி­றது. அத்­துடன் இந்த கரை­களில் சில காத­லர்கள் சில்­மி­ஷங்­களில் ஈடுப­டு­வதால் அவ்­வா­றா­னதொரு இடத்­துக்கு செல்லும் சிறுபிள்­ளை­களோ அல்­லது காதலர் அல்லா­த­வர்­களோ பல சந்­தர்ப்­பங் களில் முகம் சுளிக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

காலி முகத்­திடல், மாபிள் பீச் கடற்­கரை, தங்காலை கடற்­கரை உள்­ளிட்ட உல்லாச பிர­யா­ணிகளின் வரு­கை­யி­டங்­க­ளாக உள்ள இடங்­களில் கூட சில நேரங்­களில் இவ்­வா­றான நிலை­மை­க­ளையே அவ­தா­னிக்க நேரி­டு­கி­றது.
நாட்டில் உள்ள அழ­கிய கடற்­கரை நக­ரங்­களில் மாத்­த­றையும் ஒன்று. மாத்­தறை கடற்­க­ரை­யா­னது ஓய்வு எடுத்­துக்­கொள்ளும் வகை­யிலும் சுதந்­தி­ர­மாக உலாவும் வகை­யிலும் அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ஒரு கடற்­க­ரை­யாகும்.

இத­னாலோ என்­னவோ அங்கு ஒவ்வொரு நாளும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் வந்து செல்­வது வழமை.

அதில் காத­லர்­களும் விதி­வி­லக்­கல்ல இந்த நிலையில் காத­லர்கள் பலர் சல்­லா­பத்தில் ஈடு­ப­டு­வதால் சிறு பிள்­ளை­களை அழைத்து வருவோர் அல்­லது மன நிம்­ம­திக்­காக வருவோர் முகம் சுளிக்கும் நிலையும் காணப்படுகின்றது.
இந் நிலையில் பொது இடத்தில் அவ்­வா­றான சல்­லாபத்தில் ஈடுப­டு­ப­வர்­களை காலி முகத்­திடல் உள்­ளிட்ட கடற்­க­ரை­களில் உள்­ளதைப் போன்றே விஷேட பொலிஸ் குழு­வினர் எச்­ச­ரிப்­பது மாத்தறை கடற்கரைக்கு மட்டும் ஒன்றும் புதி­தானதல்ல. அதனாலோ என்­னவோ காத­லர்கள் சற்று கட்­டுப்­பாட்­டு­ட­னேயே அங்கு நடந்­து­கொள்­வ­தாக அறிய­மு­டி­கி­றது.

அது கடந்த மார்ச் 21 ஆம் திகதி. நேரமோ நண்­ப க­லைக்­க­டந்து ஓடிக்­கொண்­டி­ருந்­தது. பிற்­ப­கலை நோக்கி கடி­காரம் நகர்ந்­து­கொண்­டி­ருக்க மாத்தறை கடற்­க­ரையை நோக்கி காத­லர்­களின் படை­யெ­டுப்பும் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்லும் நேர­மது.

மாத்­தறை பிர­தே­சத்தில் பொலிஸ் பரி­சோ­த­க­ராக கட­மை­யாற்றும் ஒரு அதி­கா­ரியின்24 வய­தான மகன் நிபுனும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) அகு­ரஸ்ஸ பிர­தே­சத்தை சேர்ந்த அவ­ரது காத­லி­யான சஹா­னாவும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) அதே கடற்­க­ரையில் காதல் உல­கத்தில் மிதந்து­கொண்­டி­ருந்த நேர­மது.

காதல் உல­கத்தில் மிதந்­து­கொண்­டி­ருந்த நிபுன், சஹானா ஜோடி­யிடம் அந்த நேரம் கறுப்பு நிற காற்­சட்டை, வெள்ளை நிற சேர்ட் அணிந்து ஒரு உருவம் வந்து நிற்­கி­றது. ஆம் அந்த உருவம் வேறு யாரும் அல்ல, அவர் நிஷாந்த (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). காதல் உல­கத்தில் மெய் மறந்து சற்றே உச்ச நிலையில் காத­லித்­துக்­கொண்­டி­ருந்த அந்த ஜோடி­க­ளிடம் நிஷாந்த அப்­போது தான் குரல் கொடுக்­கிறார்.

‘எழுந்­தி­ருங்கள், இந்த கடற்­க­ரையில் சல்­லா­பத்தில் ஈடு­படக் கூடாது என்­பது உங்­க­ளுக்கு தெரி­யாதா? எழுந்­தி­ருங்கள் ‘ என அதி­கார தொனியில் தனி­மையில் இனிமை அனு­ப­வித்­துக்­கொண்டி­ருந்த நிபுன் – சஹானா ஜோடியைப் பார்த்து குரல் கொடுத்த நிஷாந்த தான் ஒரு பொலிஸ் பரி­சோ­தகர் என தெரி­விக்­கவும் தவ­ற­வில்லை.

அத்­துடன் தான் ஒரு பொலிஸ் பரி­சோ­தகர் என்பதை காட்ட, உடனே தனது தொலை­பே­சியில் அழைப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி மாத்­தறை கடற்­க­ரைக்கு பொலிஸ் ஜீப் வண்­டி­யொன்றை அனுப்­பு­மாறும் கூறி­யுள்ளார். அத்­துடன் அந்த காதல் ஜோடி­யினை தனது பிடியில் அவர் வைத்துக்கொண்­டி­ருந்­துள்ளார்.

எனினும் அங்கு எவ்­வித ஜீப் வண்­டியும் வர­வில்லை. இந் நிலையில் சிறிது நேரத்­துக்குள் நிபுன் – சஹானா ஜோடியை தனது வண்­டியில் ஏறுமாறு நிஷாந்த பணிக்­கவே இரு­வரும் அதில் ஏறி­யுள்­ளனர்.

நிபுனை முன் ஆச­னத்­திலும் சஹா­னாவை பின் ஆச­னத்­திலும் இருக்­கு­மாறு பணித்து அழைத்­துக்கொண்டு சென்­றுள்ளார். அவர் அழைத்துச் சென்றஅந்த வாகனம் ஒரு சொகுசு கார் ஆகும்.

இன் நிலையில் மத்­தறை தங்­காலை பிர­தான பாதையில் ஒரு இடத்தில் வண்­டியை நிறுத்தியுள்ள நிஷாந்த நிபுனை இறங்­கு­மாறு பணித்­துள்­ள­துடன் அருகில் இருந்த புகை­யி­ரத நிலை­யத்தின் சுவர் ஒன்­றினை தொட்­டு­விட்டு மீண்டும் தனது கார் அருகே வரு­மாறும் ஓடிச் சென்று ஓடிவரு­மாறும் பணித்­துள்ளார்.

அது ஒரு தண்­டனை எனவும் அதன் போது அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
இதனை அடுத்து நிபுன் ஓடிச் செல்ல நிஷாந்­தவோ சஹா­னா­வுடன் காரை வேக­மாக செலுத்­திக்­கொண்டு தங்­காலைப் பகு­திக்கு சென்றதாககூறப்­ப­டு­கி­றது.

புகை­யி­ரத நிலைய சுவரை தொட்­டு­விட்டு மீண்டும் ஓடி வந்த நிபுன் அந்த சொகுசு காரை காணாது தனது காத­லி­யான சஹா­னா­வுக்கு அழைப்பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

அப்­போது சஹா­னாவை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று அவ­ரது பெற்­றோ­ரிடம் கைய­ளிப்­ப­தாக பதில் கிடைத்­துள்­ளதாம். எனினும் பின்னர் இரண்டு மூன்று தடவை நிபுன் சஹானா வீடு சென்­று­விட்­டாரா என்­பதை அறிய அழைப்­பினை ஏற்­ப­டுத்­திய போதும் பதில் கிடைக்­க­வில்லையாம். இதனை தொடர்ந்து நிபு­னுக்கு சந்­தேகம் வழுத்­துள்­ளது.

நிபுனை இறக்­கி­விட்ட நிஷாந்த மாத்­த­றை­யி­லிருந்து நேராக தங்­கா­லைக்கு தனது சொகுசு காரை செலுத்­தி­யுள்ளார். அத்­துடன் சொகுசு காரில் உள்ள வச­தி­களைப் பயன்­ப­டுத்தி காரின் அனைத்து கத­வு­க­ளையும் பூட்­டி­யுள்ளார்.

இதனை தொடர்ந்து தங்­காலை பகு­தியில் உள்ள பாழ­டைந்த பகு­தி­யொன்றில் காரை நிறுத்­தி­யுள்ள நிஷாந்த அத­னுள்­ளேயே சஹா­னாவை பலாத்­காரம் செய்­துள்ளான். இதனை தொடர்ந்து சஹா­னாவை அங்கேயே இறக்­கி­விட்ட நிஷாந்த தனது சொகுசு காரில் மின்­னலாய் மறைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே நிபு­னுக்கு தொலை­பேசி அழைப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள சஹானா நடந்­த­வற்றைக் கூறி அழ ஆரம்­பித்­துள்ளார். சஹானா­வுக்கு ஆறுதல் தெரி­வித்­துள்ள நிபுன் உட­ன­டி­யாக தங்­கா­லை­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி வரும் பஸ் வண்­டி­யொன்றில் ஏறி மாத்தறை வரு­மாறு அறி­வு­றுத்தி மாத்­த­றையில் காத்­தி­ருந்­துள்ளார்.

மாத்­தறை வந்த சஹா­னாவை அழைத்­துக்­கொண்டு நேராக மாத்­தறை பொலிஸ் நிலையம் சென்ற நிபுன், பொலிஸில் முறை­யிட விடயம் அப்­பொலிஸ் நிலை­யத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்­பான விவ­கா­ரங்­களைக் கையாளும் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் பரிசோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­விடம் சென்­றது.

சஹா­னாவை அழைத்த பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி, சம்­பவம் போலி­யா­னது அல்­ல­வெ­னவும், சஹானா பாதிக்­கப்­பட்­டுள்­ள­தையும் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளார்.

சம்­பவம் தொடர்பில் மாத்­தறை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தேச­பந்து தென்­ன­கோனின் கவ­னத்­துக்கும் கொண்டு செல்­லப்­ப­டவே அவரின் ஆலோச­னை­களும் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வரு­ணிக்கு வழங்­கப்­பட்­டது.

நிபு­னுக்கோ சஹா­னா­வுக்கோசம்பவம்தொடர் பில் தெரிந்த விட­யங்­களில் இருந்து கறுப்பு நிற சொகு­சுகார், மாத்­தறை கடற்­கரை ஆகிய இருதுரும்­பு­களை வைத்தே விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. குறைந்த பட்சம் காரின் இலக்கம் கூட அந்த காதல் ஜோடிக்கு தெரிந்திருக்கவில்லை.

இதனை அடுத்து அதி­ர­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பெண்­பொலிஸ் பரி­சோ­தகர் வருணி மாத்­த­றை­யி­லி­ருந்து தங்­காலை வரை­யி­லான பகு­தியில் உள்ள அரச, தனியார் நிறு­வ­னக்­களின் சீ.சீ.ரீ.வீ.கண்­கா­ணிப்பு கம­ராக்­களை அந்த கறுப்பு கார் தொடர்­பி­லான தட­யங்­க­ளுக்­காக பரி­சோ­திக்கும் நட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்ளார்.

இதன் போது தனியார் வங்­கி­யொன்றில் இருந்த கண்­கா­ணிப்பு கம­ராவில் இருந்து பொலி­ஸா­ருக்கு அந்த கறுப்பு நிற கார் தொடர்­பான தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அந்த காரின் ரகம் மற்றும் அதில் ஒட்­டப்­பட்­டி­ருந்த ஸ்டிக்கர் ஆகி­யன பொலி­ஸாரின் விஷேட கவ­னத்தை ஈர்த்­தது. அந்த நவீன ரக காரில் வைத்­தியர் என்­ப­தற்­கான அடை­யா­ளத்தைக் காட்டும் ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது.

சந்­தேக நபரை விட்டு வைப்­பது மாத்­தறை கடற்­க­ரைக்கு வரும் பெண்­க­ளுக்கும் குறிப்­பாக யுவ­தி­க­ளுக்கு பெரும் ஆபத்து என்­பதை ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே ஊகித்துக் கொண்ட பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி, தாம­திக்காது நட­வ­டிக்­கையில் இறங்­கினார்.

பொலிஸ் விசா­ர­ணை­களில் அனு­பவம் வாய்ந்த பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி, காமு­கர்­களின் மன நிலையை நன்கு அறிந்து வைத்திருந்­த­தாலும் சஹானா விட­யத்தில் தொடர்­பு­டைய காமுகனின் நட­வ­டிக்கை முதல் நட­வ­டிக்­கை­யாக தெரி­யா­த­தாலும் அந்த காமுகன் மீண்டும் மாத்தறை கடற்­க­ரைக்கு வருவார் என அனு­மா­னித்தார்.

பருகப் பருகப் பாலும் புளிக்கும் என்­பார்கள். எனினும் பெண்கள் சமாச்­சாரம் அந்த பழ­மொ­ழிக்கு விதி­வி­லக்­கா­னது என்­பதை அறிந்த­தாலோ என்னவோ பொலிஸ் பரி­சோ­தகர் வருணி அப்­படி அனு­மா­னித்­தி­ருக்க வேண்டும்.

இதனால் மாத்தறை கடற்­க­ரையை அண்­டிய பகு­தியில் குறித்த கறுப்பு நிற சொகுசு கார் தொடர்­பி­லான, வைத்­தியர் என்­பதை அடை­யாளப் படுத்தும் படி­யான ஸ்டிக்கர் அணிந்த கார் வரு­கி­றதா என்பதை கண்கா­ணித்து தகவல் வழங்க ஒற்­றர்கள் பொலிஸ் பரி­சோ­தகர் வரு­ணி­யினால் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த சம்­பவம் இடம்­பெற்று சுமார் 48 மணித்­தி­யா­லங்கள் கடந்­தி­ருக்கும். அது 23 ஆம் திகதி. நேரம் எப்­ப­டியும் 4.30 இருக்கும். பொலிஸ் ஒற்றர் ஒரு­வ­ரூ­டாக அந்த சொகுசு கார் மாத்­தறை கடற்­க­ரையில் நிற்­ப­தாக தகவல் பொலிஸ் பரி­சோ­தகர் வரு­ணிக்கு பரி­மாற்­றப்­பட்­டது.

உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸ் பரி­சோ­தகர் கடற்­க­ரையை நோக்கி தமது குழு­வுடன் பயணம் செய்­ய­லானார். தனது காமத்­துக்கு இரை­யாக்க அப்­போதும் எவ­ரேனும் அப்­பாவி காதல் ஜோடிகள் தெரி­கி­றார்­களா என கண்­கா­ணித்துக் கொண்­டி­ருந்த நிஷாந்­தவை பொலிஸ் வருணி அவதானித்தார்.

இத­னி­டையே பொலி­ஸாரைக் கண்ட நிஷாந்த தனது சொகுசு காரில் ஏறி மின்­னலாய் மறைய முற்­பட்டார். எனினும் பெண் பொலிஸ் பரி­சோதகர் விட­வில்லை. அந்த சொகுசு காரை பின் தொடர்ந்தார்.

இத­னி­டையே சார்­ஜ­னான சுமதி பால (55850), கான்ஸ்­ட­பிள்­க­ளான சந்தன (37982),புஷ்­ப­கு­மார(28630),சந்ரா பிர­முக (5282) ஆகி­யோ­ருடன் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் பாதையில் சென்று கொண்­டி­ருந்த வேன் ஒன்றை மறைத்து அந்த காரினை பின் தொடர்ந்­துள்ளார்.

இதன் போது பிர­தான பாதையில் ஒரு இடத்தில் சரி­யாக சினி­மாவை ஒத்த ஒரு காட்சி இடம்­பெற்­றது. நிஷாந்த பய­ணித்த காரின் முன்னாள் குறுக்­காக பொலிஸார் வந்த வேன் நிறுத்­தப்­படவே கார் தானாக நின்­றது. வேனி­லி­ருந்து பாய்ந்து சென்ற பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி சந்­தேக நபரை மடக்­கினார்.

எனினும் தான் ஒரு வைத்தியர் எனவும் தன்னை கட­மைக்கு செல்­ல­வி­டாது தடுப்­பது குற்­ற­மெ­னவும் பொலி­ஸா­ருடன் வாதிட பொலிஸ் பரி­சோ­தகர் வரு­ணியோ கைவி­லங்கை நிஷாந்­தவின் கைகளில் மாட்­டினார்.

சந்­தேக நபரை காதலன் நிபுனும் அடை­யாளம் காட்ட விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.

குறித்த நிஷாந்த எனப்­படும் சந்­தேக நபர் 39 வய­தா­னவர்.வலஸ்­முல்லை பகு­தியை சேர்ந்த இந்த காமுகன் பெண் வைத்­தியர் ஒரு­வரின் காதல் கணவன்.

ஒன்று, மூன்று வய­து­களை உடைய இரு பிள்ளைகளின் தந்தையும் கூட.தனது வைத்திய மனைவி கடமைக்கு சென்றதும் அவரது சொகுசு காரை எடுத்துக் கொண்டு இந்த காம களியாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை அவர் வழமையாக செய்துவந்துள்ளமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்படும் போது அந்த காரிலிருந்து கருத்தடை வில்லைகள் ,உணவு, பானவகைகள் பல்வேறு சிம் அட்டைகள் மற்றும் பொலிஸார் பயன்படுத்தும் லத்தியை ஒத்த தடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த காமு­க­னான நிஷாந்த நீண்ட நாட்­க­ளாக இந்த கரு­மத்­தினை செய்­து­வந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளதை அடுத்து அவனால் பாதிக்­கப்­பட்ட எவ­ரா­வது இருப்பின் அவர்­களை உட­ன­டி­யாக பொலிஸில் வந்து முறை­யி­டு­மாறு பொலிஸார் வேண்­டு­கின்­றனர்.

மனைவி நோயை சுகப்­ப­டுத்த கண­வனோ யுவ­தி­களை தனது ஆசைக்கு பலி­யாக்கும் இந்த சம்­பவம் மாத்­தறை பகு­தியை பெரும் அதிர்ச்­சிக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தது. பொலிஸ் என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தும் இவ்­வா­றான காமு­கர்­க­ளி­ட­மி­ருந்து யுவதிகள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது அவசியமானதாகும்.

Post a Comment

0 Comments