காதலர்களுக்கு
கடற்கரை என்பது மிகவும் பிடித்தமான இடம் என்பதில்
மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடி யாது. காதலர்கள் சுதந்திரமாக
மனது விட்டு உரையாட கடற்கரையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கையின்
பல கடற்கரைகளிலும் நாம் இதனை அவதானிக்க முடிகிறது. அத்துடன் இந்த
கரைகளில் சில காதலர்கள் சில்மிஷங்களில் ஈடுபடுவதால்
அவ்வாறானதொரு இடத்துக்கு செல்லும் சிறுபிள்ளைகளோ அல்லது காதலர்
அல்லாதவர்களோ பல சந்தர்ப்பங் களில் முகம் சுளிக்கும் நிலையும்
ஏற்படுகின்றது.
காலி
முகத்திடல், மாபிள் பீச் கடற்கரை, தங்காலை கடற்கரை உள்ளிட்ட உல்லாச
பிரயாணிகளின் வருகையிடங்களாக உள்ள இடங்களில் கூட சில நேரங்களில்
இவ்வாறான நிலைமைகளையே அவதானிக்க நேரிடுகிறது.
நாட்டில்
உள்ள அழகிய கடற்கரை நகரங்களில் மாத்தறையும் ஒன்று. மாத்தறை
கடற்கரையானது ஓய்வு எடுத்துக்கொள்ளும் வகையிலும் சுதந்திரமாக
உலாவும் வகையிலும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கடற்கரையாகும்.
இதனாலோ என்னவோ அங்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்வது வழமை.
அதில்
காதலர்களும் விதிவிலக்கல்ல இந்த நிலையில் காதலர்கள் பலர்
சல்லாபத்தில் ஈடுபடுவதால் சிறு பிள்ளைகளை அழைத்து வருவோர் அல்லது
மன நிம்மதிக்காக வருவோர் முகம் சுளிக்கும் நிலையும் காணப்படுகின்றது.
இந்
நிலையில் பொது இடத்தில் அவ்வாறான சல்லாபத்தில் ஈடுபடுபவர்களை காலி
முகத்திடல் உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ளதைப் போன்றே விஷேட பொலிஸ்
குழுவினர் எச்சரிப்பது மாத்தறை கடற்கரைக்கு மட்டும் ஒன்றும்
புதிதானதல்ல. அதனாலோ என்னவோ காதலர்கள் சற்று கட்டுப்பாட்டுடனேயே
அங்கு நடந்துகொள்வதாக அறியமுடிகிறது.
அது கடந்த
மார்ச் 21 ஆம் திகதி. நேரமோ நண்ப கலைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது.
பிற்பகலை நோக்கி கடிகாரம் நகர்ந்துகொண்டிருக்க மாத்தறை கடற்கரையை
நோக்கி காதலர்களின் படையெடுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்லும்
நேரமது.
மாத்தறை
பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் ஒரு அதிகாரியின்24
வயதான மகன் நிபுனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அகுரஸ்ஸ பிரதேசத்தை
சேர்ந்த அவரது காதலியான சஹானாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே
கடற்கரையில் காதல் உலகத்தில் மிதந்துகொண்டிருந்த நேரமது.
காதல்
உலகத்தில் மிதந்துகொண்டிருந்த நிபுன், சஹானா ஜோடியிடம் அந்த நேரம்
கறுப்பு நிற காற்சட்டை, வெள்ளை நிற சேர்ட் அணிந்து ஒரு உருவம் வந்து
நிற்கிறது. ஆம் அந்த உருவம் வேறு யாரும் அல்ல, அவர் நிஷாந்த (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). காதல் உலகத்தில் மெய் மறந்து சற்றே உச்ச நிலையில்
காதலித்துக்கொண்டிருந்த அந்த ஜோடிகளிடம் நிஷாந்த அப்போது தான்
குரல் கொடுக்கிறார்.
‘எழுந்திருங்கள்,
இந்த கடற்கரையில் சல்லாபத்தில் ஈடுபடக் கூடாது என்பது உங்களுக்கு
தெரியாதா? எழுந்திருங்கள் ‘ என அதிகார தொனியில் தனிமையில் இனிமை
அனுபவித்துக்கொண்டிருந்த நிபுன் – சஹானா ஜோடியைப் பார்த்து குரல்
கொடுத்த நிஷாந்த தான் ஒரு பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கவும்
தவறவில்லை.
அத்துடன்
தான் ஒரு பொலிஸ் பரிசோதகர் என்பதை காட்ட, உடனே தனது தொலைபேசியில்
அழைப்பொன்றினை ஏற்படுத்தி மாத்தறை கடற்கரைக்கு பொலிஸ் ஜீப்
வண்டியொன்றை அனுப்புமாறும் கூறியுள்ளார். அத்துடன் அந்த காதல்
ஜோடியினை தனது பிடியில் அவர் வைத்துக்கொண்டிருந்துள்ளார்.
எனினும்
அங்கு எவ்வித ஜீப் வண்டியும் வரவில்லை. இந் நிலையில் சிறிது
நேரத்துக்குள் நிபுன் – சஹானா ஜோடியை தனது வண்டியில் ஏறுமாறு நிஷாந்த
பணிக்கவே இருவரும் அதில் ஏறியுள்ளனர்.
நிபுனை
முன் ஆசனத்திலும் சஹானாவை பின் ஆசனத்திலும் இருக்குமாறு பணித்து
அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அவர் அழைத்துச் சென்றஅந்த வாகனம் ஒரு
சொகுசு கார் ஆகும்.
இன்
நிலையில் மத்தறை தங்காலை பிரதான பாதையில் ஒரு இடத்தில் வண்டியை
நிறுத்தியுள்ள நிஷாந்த நிபுனை இறங்குமாறு பணித்துள்ளதுடன் அருகில்
இருந்த புகையிரத நிலையத்தின் சுவர் ஒன்றினை தொட்டுவிட்டு மீண்டும்
தனது கார் அருகே வருமாறும் ஓடிச் சென்று ஓடிவருமாறும் பணித்துள்ளார்.
அது ஒரு தண்டனை எனவும் அதன் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை
அடுத்து நிபுன் ஓடிச் செல்ல நிஷாந்தவோ சஹானாவுடன் காரை வேகமாக
செலுத்திக்கொண்டு தங்காலைப் பகுதிக்கு சென்றதாககூறப்படுகிறது.
புகையிரத
நிலைய சுவரை தொட்டுவிட்டு மீண்டும் ஓடி வந்த நிபுன் அந்த சொகுசு காரை
காணாது தனது காதலியான சஹானாவுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அப்போது
சஹானாவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம்
கையளிப்பதாக பதில் கிடைத்துள்ளதாம். எனினும் பின்னர் இரண்டு மூன்று
தடவை நிபுன் சஹானா வீடு சென்றுவிட்டாரா என்பதை அறிய அழைப்பினை
ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லையாம். இதனை தொடர்ந்து
நிபுனுக்கு சந்தேகம் வழுத்துள்ளது.
நிபுனை
இறக்கிவிட்ட நிஷாந்த மாத்தறையிலிருந்து நேராக தங்காலைக்கு தனது
சொகுசு காரை செலுத்தியுள்ளார். அத்துடன் சொகுசு காரில் உள்ள வசதிகளைப்
பயன்படுத்தி காரின் அனைத்து கதவுகளையும் பூட்டியுள்ளார்.
இதனை
தொடர்ந்து தங்காலை பகுதியில் உள்ள பாழடைந்த பகுதியொன்றில் காரை
நிறுத்தியுள்ள நிஷாந்த அதனுள்ளேயே சஹானாவை பலாத்காரம் செய்துள்ளான்.
இதனை தொடர்ந்து சஹானாவை அங்கேயே இறக்கிவிட்ட நிஷாந்த தனது சொகுசு
காரில் மின்னலாய் மறைந்துள்ளார்.
இதனைத்
தொடர்ந்தே நிபுனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ள சஹானா
நடந்தவற்றைக் கூறி அழ ஆரம்பித்துள்ளார். சஹானாவுக்கு ஆறுதல்
தெரிவித்துள்ள நிபுன் உடனடியாக தங்காலையிலிருந்து மாத்தறை
நோக்கி வரும் பஸ் வண்டியொன்றில் ஏறி மாத்தறை வருமாறு அறிவுறுத்தி
மாத்தறையில் காத்திருந்துள்ளார்.
மாத்தறை
வந்த சஹானாவை அழைத்துக்கொண்டு நேராக மாத்தறை பொலிஸ் நிலையம் சென்ற
நிபுன், பொலிஸில் முறையிட விடயம் அப்பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும்
சிறுவர் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு பொறுப்பான
சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவிடம் சென்றது.
சஹானாவை
அழைத்த பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி, சம்பவம் போலியானது
அல்லவெனவும், சஹானா பாதிக்கப்பட்டுள்ளதையும்
உறுதிப்படுத்திக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
சம்பவம்
தொடர்பில் மாத்தறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனின் கவனத்துக்கும் கொண்டு
செல்லப்படவே அவரின் ஆலோசனைகளும் பெண் பொலிஸ் பரிசோதகர் வருணிக்கு
வழங்கப்பட்டது.
நிபுனுக்கோ
சஹானாவுக்கோசம்பவம்தொடர் பில் தெரிந்த விடயங்களில் இருந்து கறுப்பு
நிற சொகுசுகார், மாத்தறை கடற்கரை ஆகிய இருதுரும்புகளை வைத்தே
விசாரணைகள் ஆரம்பமாகின. குறைந்த பட்சம் காரின் இலக்கம் கூட அந்த காதல்
ஜோடிக்கு தெரிந்திருக்கவில்லை.
இதனை
அடுத்து அதிரடியாக விசாரணைகளை முன்னெடுத்த பெண்பொலிஸ் பரிசோதகர்
வருணி மாத்தறையிலிருந்து தங்காலை வரையிலான பகுதியில் உள்ள அரச,
தனியார் நிறுவனக்களின் சீ.சீ.ரீ.வீ.கண்காணிப்பு கமராக்களை அந்த
கறுப்பு கார் தொடர்பிலான தடயங்களுக்காக பரிசோதிக்கும்
நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதன் போது
தனியார் வங்கியொன்றில் இருந்த கண்காணிப்பு கமராவில் இருந்து
பொலிஸாருக்கு அந்த கறுப்பு நிற கார் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த காரின் ரகம் மற்றும் அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் ஆகியன
பொலிஸாரின் விஷேட கவனத்தை ஈர்த்தது. அந்த நவீன ரக காரில் வைத்தியர்
என்பதற்கான அடையாளத்தைக் காட்டும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
சந்தேக
நபரை விட்டு வைப்பது மாத்தறை கடற்கரைக்கு வரும் பெண்களுக்கும்
குறிப்பாக யுவதிகளுக்கு பெரும் ஆபத்து என்பதை ஆரம்பகட்ட
விசாரணைகளிலேயே ஊகித்துக் கொண்ட பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி,
தாமதிக்காது நடவடிக்கையில் இறங்கினார்.
பொலிஸ்
விசாரணைகளில் அனுபவம் வாய்ந்த பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி,
காமுகர்களின் மன நிலையை நன்கு அறிந்து வைத்திருந்ததாலும் சஹானா
விடயத்தில் தொடர்புடைய காமுகனின் நடவடிக்கை முதல் நடவடிக்கையாக
தெரியாததாலும் அந்த காமுகன் மீண்டும் மாத்தறை கடற்கரைக்கு வருவார் என
அனுமானித்தார்.
பருகப்
பருகப் பாலும் புளிக்கும் என்பார்கள். எனினும் பெண்கள் சமாச்சாரம் அந்த
பழமொழிக்கு விதிவிலக்கானது என்பதை அறிந்ததாலோ என்னவோ பொலிஸ்
பரிசோதகர் வருணி அப்படி அனுமானித்திருக்க வேண்டும்.
இதனால்
மாத்தறை கடற்கரையை அண்டிய பகுதியில் குறித்த கறுப்பு நிற சொகுசு கார்
தொடர்பிலான, வைத்தியர் என்பதை அடையாளப் படுத்தும் படியான ஸ்டிக்கர்
அணிந்த கார் வருகிறதா என்பதை கண்காணித்து தகவல் வழங்க ஒற்றர்கள் பொலிஸ்
பரிசோதகர் வருணியினால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த
சம்பவம் இடம்பெற்று சுமார் 48 மணித்தியாலங்கள் கடந்திருக்கும். அது
23 ஆம் திகதி. நேரம் எப்படியும் 4.30 இருக்கும். பொலிஸ் ஒற்றர்
ஒருவரூடாக அந்த சொகுசு கார் மாத்தறை கடற்கரையில் நிற்பதாக தகவல்
பொலிஸ் பரிசோதகர் வருணிக்கு பரிமாற்றப்பட்டது.
உடனடியாக
செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் கடற்கரையை நோக்கி தமது குழுவுடன் பயணம்
செய்யலானார். தனது காமத்துக்கு இரையாக்க அப்போதும் எவரேனும் அப்பாவி
காதல் ஜோடிகள் தெரிகிறார்களா என கண்காணித்துக் கொண்டிருந்த
நிஷாந்தவை பொலிஸ் வருணி அவதானித்தார்.
இதனிடையே
பொலிஸாரைக் கண்ட நிஷாந்த தனது சொகுசு காரில் ஏறி மின்னலாய் மறைய
முற்பட்டார். எனினும் பெண் பொலிஸ் பரிசோதகர் விடவில்லை. அந்த சொகுசு
காரை பின் தொடர்ந்தார்.
இதனிடையே
சார்ஜனான சுமதி பால (55850), கான்ஸ்டபிள்களான சந்தன
(37982),புஷ்பகுமார(28630),சந்ரா பிரமுக (5282) ஆகியோருடன் பெண்
பொலிஸ் பரிசோதகர் பாதையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றை மறைத்து அந்த
காரினை பின் தொடர்ந்துள்ளார்.
இதன் போது
பிரதான பாதையில் ஒரு இடத்தில் சரியாக சினிமாவை ஒத்த ஒரு காட்சி
இடம்பெற்றது. நிஷாந்த பயணித்த காரின் முன்னாள் குறுக்காக பொலிஸார் வந்த
வேன் நிறுத்தப்படவே கார் தானாக நின்றது. வேனிலிருந்து பாய்ந்து சென்ற
பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி சந்தேக நபரை மடக்கினார்.
எனினும்
தான் ஒரு வைத்தியர் எனவும் தன்னை கடமைக்கு செல்லவிடாது தடுப்பது
குற்றமெனவும் பொலிஸாருடன் வாதிட பொலிஸ் பரிசோதகர் வருணியோ
கைவிலங்கை நிஷாந்தவின் கைகளில் மாட்டினார்.
சந்தேக நபரை காதலன் நிபுனும் அடையாளம் காட்ட விசாரணைகள் தொடர்ந்தன.
குறித்த
நிஷாந்த எனப்படும் சந்தேக நபர் 39 வயதானவர்.வலஸ்முல்லை பகுதியை
சேர்ந்த இந்த காமுகன் பெண் வைத்தியர் ஒருவரின் காதல் கணவன்.
ஒன்று,
மூன்று வயதுகளை உடைய இரு பிள்ளைகளின் தந்தையும் கூட.தனது வைத்திய மனைவி
கடமைக்கு சென்றதும் அவரது சொகுசு காரை எடுத்துக் கொண்டு இந்த காம
களியாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அவர் வழமையாக செய்துவந்துள்ளமையும் பொலிஸாரின் விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
அத்துடன்
கைது செய்யப்படும் போது அந்த காரிலிருந்து கருத்தடை வில்லைகள் ,உணவு,
பானவகைகள் பல்வேறு சிம் அட்டைகள் மற்றும் பொலிஸார் பயன்படுத்தும் லத்தியை
ஒத்த தடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த
காமுகனான நிஷாந்த நீண்ட நாட்களாக இந்த கருமத்தினை
செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து அவனால் பாதிக்கப்பட்ட
எவராவது இருப்பின் அவர்களை உடனடியாக பொலிஸில் வந்து முறையிடுமாறு
பொலிஸார் வேண்டுகின்றனர்.
மனைவி
நோயை சுகப்படுத்த கணவனோ யுவதிகளை தனது ஆசைக்கு பலியாக்கும் இந்த
சம்பவம் மாத்தறை பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு
உட்படுத்தியிருந்தது. பொலிஸ் என தன்னை அடையாளப்படுத்தும்
இவ்வாறான காமுகர்களிடமிருந்து யுவதிகள் எச்சரிக்கையுடன்
நடந்துகொள்வது அவசியமானதாகும்.
0 Comments