Subscribe Us

header ads

கொழும்பு தெஹிவளையில் மூடப்பட்டது அல்லாஹ்வின் மாளிகை மஸ்ஜிதுல் ஷாபி பள்ளிவாசல்.

(Naveeth)

கொழும்பை அண்மித்த தெஹிவளை கடவத்தை வீதியிலுள்ள மஸ்ஜிதுல் ஷாபி பள்ளிவாசல் நேற்றிரவு  மூடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையிலேயே பள்ளிவாசல் மூடப்பட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த பள்ளிவாசலை அண்டி வாழும் சிலரால் கங்கொடவில நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்றின் அடிப்படையிலே இந்தப் பள்ளிவாசல் மூடப்பட்டதாக  நிர்வாக சபை அறிவித்துள்ளது.

இந்தப்  பள்ளிவாசல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி  கங்கொடவில நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தெரிந்ததே.

Post a Comment

0 Comments