Subscribe Us

header ads

'விமானத்தின் 2 பாகங்கள் கண்டுபிடிப்பு'

வளர்ந்து நிற்கும் தொழில்­நுட்ப உலகின் வணிக ரீதி­யி­லான விமானப்­போக்­கு­வ­ரத்து வர­லாற்­றி­லேயே மலே­ஷியா எயார்­லைன்ஸின் எம்.எச். 370 விமானம் விடை புரி­யாத புதி­ராக மர்­ம­மாகி இன்­றுடன் சுமார் இரு வாரங்களாகின்றன.

இவ்­வி­மானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட வேளையில்  227 பய­ணிகள் மற்றும் 12 விமான ஊழி­யர்கள் அடங்­க­லாக மொத்­த­மாக 239 பேருடன் அதி­காலை 1.22 மணி­யளவில் மர்ம­மா­னது.

செய்­ம­திகள், ரேடர் கரு­விகள் என பல்­லா­யி­ரக்­க­ணக்­கான கண்­கா­ணிப்பு
சாத­னங்­களைத் தாண்டி சுமார் 2 வாரங்­க­ளாக மர்­மத்தை தாங்கி நிற்­கின்ற எம்.எச். 370 விமானம் குறித்து இன்று வரையில் எது­வித அதி­கா­ர­பூர்வ ஆதா­ரங்­களும் கிடைக்­காமை பெரும் ஏமாற்­ற­மா­கவே உள்­ளது.

இந்­நி­லையில் நேற்று தெற்கு இந்து சமுத்­தி­ரத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவின்
பேர்த்­துக்கு அண்­மையில் செய்­மதிப் படங்கள் மூலம் 2 பொருட்கள்
கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது மர்­ம­மான விமா­னத்தின் சிதை­வாக
இருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தா­கவும் ஆஸி. பிர­தமர் டொனி அபோட் நாடா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

 இதில் ஒரு பாகம் 78 அடி நீள­மா­னது எனவும் மற்­றை­யது சிறியளவானது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆரம்­பத்தில் விமானம் விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­பட்ட போதிலும் பின்னர் விமானம் கடத்­தப்­பட்­டி­ருப்­ப­தற்கே வாய்ப்­புகள் அதிகம் என அதன்பால் விசா­ர­ணைகள் திரும்­பி­யுள்ள நிலையில் இந்த பாகங்கள் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வதாய் அமைந்­துள்­ளன.

ஏனெனில், மர்­ம­மான விமானம் எங்கோ ஓரி­டத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என எப்.பி.ஐ.யும் தகவல் தெரி­வித்தி­ருந்­தது. விமானம் ரேடரில் சிக்­காமல் இருக்க 5 ஆயிரம் அடி உய­ரத்தில் மிகத் தாழ்­வாகப் பறந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

தரை­யி­றக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் நிலப்­ப­ரப்­பி­லுள்ள 26
நாடு­களில் போயிங் 777 விமானம் தரையிறக்கக்கூடிய 634 விமான ஓடு­பா­தைகள் உள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. போயிங் 777 விமா­னத்­தினை தரை­யி­றக்க குறைந்­தது 5,000 அடி நீள­மான ஓடு­பாதை தேவை. அவ­சர நேரத்­திலே இவ்­வா­றான ஓடு­பா­தை­களில் தரை­யி­றக்­கப்­படும்.

 இதே­வேளை, ரேடர் தொடர்­பினை நிறுத்­தி­யதன் பின்னர் விமானம் சில மணி­நே­ரங்கள் பறந்­துள்­ள­மை­யினால் மலே­ஷியா தவிர்ந்த வேறு சில நாடு­களின் வான்­ப­ரப்பிலும் விமானம் பறந்­துள்­ளதாகக் கூறப்படுகின்றது.'அவை உண்மை. ஆனால் அது குறித்த தக­வல்­களை தற்­போது வெளி­யிடும் சுதந்­திரம்  எமக்கு இல்லை' என மலே­ஷி­யாவின் பாது­காப்பு மற்றும் பதில் போக்­கு­வ­ரத்து அமைச்சர் ஹுஸெய்ன் ஹிஸா­முதீன் குறிப்­பிட்­டுள்ளார்.

விமானம் காணா­மல்­போ­னமை குறித்து பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது­வ­ரையில் சாத்­தி­ய­மான கோணத்­தி­ல­மைந்­துள்ள விசா­ர­ணைகள் கீழ்வருமாறு அமைந்துள்ளன.

விமா­னிகள் உள்­நோக்­கத்­துடன் செயற்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் நில­வு­கின்­றது. இதனால் மர்­ம­மான விமா­னத்தின் 18,356 மணி­நேர பறப்பு அனு­ப­வ­மிக்க பிர­தான விமானி ஷஹாரி அஹமட் ஷா (53) மற்றும் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் (27) ஆகி­யோரின் பின்­னணி குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

விமானக் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­து­ட­னான தொடர்­பிற்­கான சமிக்­ஞை­களை
நிறுத்­தி­யுள்ள விதம், போயிங் 777-–200 ஈ.ஆர் மாதிரி பற்றி கைதேர்ந்­த­வர்­க­ளி­னா­லேயே மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ள­மையே விமா­னிகள் விமானக் கடத்தலில் ஈடு­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. 9/11 அமெ­ரிக்கா மீதான தாக்­குதல் போன்­ற­வற்­றுக்­காக தீவி­ர­வா­திகள் கடத்­தி­யி­ருக்­கலாம் என­வும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இது­வ­ரையில் எந்­த­வொரு இயக்­கமும் விமானம் குறித்து பொறுப்­பேற்­க­வில்லை. எப்.பி.ஐ.யும் இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றனர்.

அத்துடன் தவறுதலான இராணுவத் தாக்குதல், தொலைத்தொடர்பு குறைந்த பிரதேசத்தில் விமானம் தரையிறக்கி மறைத்து வைத்தல், ஒட்சிசன் வாயுக் குறைவினால் விமானத்திலுள்ளவர்கள் மரணம், தீ விபத்து என பல வாறான கொள்கையளவிலான சந்தேகங்களை யும் அடிப்படையாகக்கொண்டே தற் போது தேடுதல்கள்  இடம்பெற்று வரு கின்றது.




Post a Comment

0 Comments